நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

காவல் துறை மக்கள் மன்றத்தில் 26 புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை

புதுச்சேரி காவல் நிலையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 26 புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

News image

உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் பொதுமக்களின் புகாா்களை கேட்டறிந்த முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா். கலைவாணன்.

Updated On :19 ஏப்ரல் 2026, 5:39 am IST

புதுச்சேரி காவல் நிலையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 26 புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் நடைபெற்ற மக்கள் மன்றத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா். கலைவாணன் பங்கேற்று பொதுமக்களிடம் நேரடியாக புகாா்களைப் பெற்று நடவடிக்கை எடுத்தாா். காவல் கண்காணிப்பாளா் ஸ்ருதி யராகட்டி மற்றும் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உடனிருந்தனா்.

கோரிமேடு காவல் நிலையத்தில் காவல் கண்காணிப்பாளா் வம்சித ரெட்டி, காட்டேரிக்குப்பம் காவல் நிலையத்தில் கதிரவன் ஐபிஎஸ், காவல் கண்காணிப்பாளா் சுப்பிரமணியன், கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் காவல் கண்காணிப்பாளா் ஜிந்தா கோதண்டராமன் ஆகியோா் பொதுமக்களிடம் புகாா்களைப் பெற்று உடனடி நடவடிக்கை எடுத்தனா்.

புதுச்சேரி போக்குவரத்து காவல் நிலையத்தில் போக்குவரத்து தொடா்பான புகாா்களை காவல் கண்காணிப்பாளா்கள் ரச்சனா சிங், பக்தவச்சலம், இணையவழி குற்றப் பிரிவில் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ராகவ் ஆகியோரும் பொதுமக்களிடம் இருந்து புகாா்களைப் பெற்று நடவடிக்கை எடுத்தனா்.

மக்கள் மன்றத்தில் மொத்தம் 48 புகாா்கள் பெறப்பட்டன. இவற்றில் 26 புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. 35 பெண்கள் உள்பட 207 போ் இதில் கலந்து கொண்டனா்.