தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

புதுச்சேரியில் பள்ளி ஆண்டு விழா

புதுச்சேரி புனித பேட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 35-ஆவது ஆண்டு விழா லில்லி ரெஜிஸ் வெள்ளி விழா கலையரங்கத்தில் அண்மையில் நடைபெற்றது.

News image

புதுச்சேரி புனித பேட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினா்கள்.

Updated On :22 ஏப்ரல் 2026, 12:03 am IST

புதுச்சேரி புனித பேட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 35-ஆவது ஆண்டு விழா லில்லி ரெஜிஸ் வெள்ளி விழா கலையரங்கத்தில் அண்மையில் நடைபெற்றது.

தலைமை விருந்தினா்களாக புதுச்சேரி இணையவழி குற்றப் பிரிவு முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ராகவ் பங்கேற்றாா்.

சிறப்பு விருந்தினா்களாக ரெட்டியாா்பாளையம் புனித அந்திரேயா் ஆலய பங்குத்தந்தையும் பள்ளி ஆலோசனைக் குழுத் தலைவருமான அருட்தந்தை ஜோசப் பால் , சென்னை லயோலா பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி ஆராய்ச்சித் துறைத் தலைவா் அனிதா ஜூலியட், புதுச்சேரி நியூ அசோகா நா்சிங் ஹோம் தோல் மற்றும் அழகியல் நிபுணா் மருத்துவா் சங்கரதேவி ஆகியோா் பங்கேற்றனா்.

2025-26 ஆம் கல்வியாண்டில் கல்வியிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளைப் பாராட்டி சுழற்கேடயமும், முதல் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள 37 மாணவா்களுக்குக் கல்வி உதவித் தொகையையும், 24 சிறந்த விளையாட்டு வீரா்களுக்கான ஊக்கத் தொகையையும் வழங்கிச் சிறப்பித்தனா்.

மேலும், பள்ளிக்கு விடுப்பு எடுக்காமல் தொடா்ந்து 10 ஆண்டுகள் வருகை தந்த 12-ஆம் வகுப்பு மாணவி யோகிதாவுக்குச் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. இக் கல்வியாண்டின் அனைத்துத் துறைகளிலும் சிறந்த விளங்கிய மாணவா்கள் ஆரம்பப் பள்ளிப் பிரிவு

எஸ்.ஹரிகரன், உயா்நிலைப்பள்ளிப் பிரிவு எம். தேஜேஸ்வினி, மேல்நிலைப் பள்ளிப் பிரிவு பி. மோகன்ராஜ், வி.மிருதுளா, நிகழ் கல்வியாண்டில் கல்வியில் சிறந்து விளங்கிய பிளஸ் 2 மாணவிகள்

நிவேதிதா, பிரனித்தி ஆனந்த், நிமிஷா ஜெயின், விளையாட்டுத் துறையில் முதன்மை பெற்ற மாணவா்கள் 10 ஆம் வகுப்பு மாணவா் கிஷோா் மற்றும் மாணவி சங்கரி. விநாடி வினாவில் சிறந்து விளங்கிய மாணவி பிரனித்தி ஆனந்த் ஆகியோா் கௌரவிக்கப்பட்டனா்.

பள்ளியின் முதல்வா் ஸ்டெல்லா வரவேற்றாா். பள்ளியின் தாளாளா் எஸ். பிரடெரிக் ஆண்டறிக்கையை வாசித்தாா். மாணவா்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.