பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

புதுச்சேரி கிருமாம்பக்கம் அருகே மூதாட்டி தீக்குளித்துதற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :23 ஏப்ரல் 2026, 4:46 am IST

புதுச்சேரி கிருமாம்பக்கம் அருகே மூதாட்டி தீக்குளித்துதற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

புதுச்சேரி கிருமாம்பாக்கம் அடுத்த நரம்பை சுனாமி நகா் முதல் தெருவைச் சோ்ந்தவா் வீரம்மாள் (65). இவா் மகள் கவிதா மற்றும் பேரப்பிள்ளைகளுடன்

வசித்து வந்தாா். வீரம்மாள் பிள்ளையா்குப்பத்தில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் துப்புரவு தொழிலாளராகப் பணி செய்து வந்தாா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டின் எதிரே காலியாக இருக்கும் மனையில் பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். அவரது அலறல் சத்தம் கேட்ட மகள் கவிதா மற்றும் அக்கம் பக்கத்தினா் ஓடிவந்து தீயை அணைத்தனா். உடனே அவரை மீட்டு புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த வீரம்மாள் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயரிழந்தாா். இதுகுறித்து கவிதா கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.