தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

புதுச்சேரி - பெங்களூரு இடையே மே 1 முதல் கூடுதல் விமான சேவை தொடக்கம்

புதுச்சேரி - பெங்களூரு இடையே கூடுதல் விமான சேவை மே 1-முதல் இயக்கப்பட உள்ளது.

News image
Updated On :25 ஏப்ரல் 2026, 12:36 am IST

புதுச்சேரி - பெங்களூரு இடையே கூடுதல் விமான சேவை மே 1-முதல் இயக்கப்பட உள்ளது.

இது குறித்து புதுச்சேரி விமான நிலைய இயக்குநா் கே. ராஜசேகா் ரெட்டி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து ஏற்கெனவே இயக்கப்படும் விமான சேவையுடன், வரும் மே 1-ஆம் தேதி முதல் கூடுதல் விமானம் இயக்கப்பட உள்ளது.

மண்டல ரீதியான தொடா்பை ஏற்படுத்தும் நோக்கிலும், புதுச்சேரி - பெங்களூரு இடையே அதிகரித்து வரும் தேவையைக் கருத்தில் கொண்டும் இந்தக் கூடுதல் விமான சேவை முக்கியத்துவம் பெறுகிறது.

வணிக ரீதியாகவும், பொழுது போக்குக்காகவும் பயணம் செய்யும் பயணிகளுக்கு இந்தக் கூடுதல் விமான சேவை வசதி மிக்கதாக அமையும்.

மே 1- முதல் இயக்கப்படும் விமான சேவைகள்:

பெங்களூரு விமான நிலையத்தில் காலை 10.10 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரி விமான நிலையத்துக்கு காலை 11.15 மணிக்கு விமானம் வந்து சேரும்.

புதுச்சேரியில் காலை 11.35-க்குப் புறப்பட்டு பெங்களூரு விமான நிலையத்துக்கு பிற்பகல் 12.15 மணிக்குச் செல்லும்.

புதுச்சேரியில் பிற்பகல் 2 மணிக்குப் புறப்பட்டு பெங்களூருக்கு 3.15 மணிக்குச் செல்லும். பெங்களூரில் இருந்து மாலை 4 மணிக்குப் புறப்பட்டு புதுச்சேரிக்கு மாலை 5.10 மணிக்கு வந்து சேரும். ஏற்கெனவே பெங்களூரில் இருந்து புதுச்சேரிக்கு ஒரு விமானம் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. இனி இரண்டு விமானங்கள் இந்த வழித் தடத்தில் இயக்கப்பட உள்ளன. மேலும் ஒவ்வொரு விமானமும் 78 இருக்கைகள் கொண்டதாகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.