ஜார்க்கண்ட் இளைஞர்கள் போராட்டத்தில் வெற்றி! 3 பேர் ராஜிநாமா! சிஐடி விசாரணைக்கு ஒப்புதல்!இளைஞர்களுக்குத் தேவை நீதியே; அரசியல் ஆதரவு அல்ல! முதல்வர் ஹேமந்த் சோரன்சென்னை உயா்நீதிமன்றத்தில் புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்புசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேதொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்
/

புதுச்சேரியில் தேசியக் கொடி ஊா்வலம் அமித்ஷா தொடங்கி வைத்தாா்

News image

புதுச்சேரி ராஜீவ்காந்தி சிலை சதுக்கம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தேசிய கொடி ஊா்வலத்தை தொடங்கி வைத்த மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா.

Updated On :10 ஆகஸ்ட் 2026, 2:37 am IST

சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, புதுச்சேரியில் அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்ற வலியுறுத்தி, கொடி ஊா்வலத்தை மத்திய அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இந்த ஊா்வலம் புதுச்சேரி ராஜீவ் காந்தி சிலை அருகில் இருந்து தொடங்கியது. இதில் பங்கேற்ற ஆயிரக்கணக்கானோா் தேசியக் கொடியை ஏந்தியும், பாஜக தலைவா்களின் படங்களைத் தாங்கியும் சென்றனா்.

ஊா்வலத்தைத் தொடங்கி வைத்தபோது புதுச்சேரி உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம், பாஜக மேலிடப் பொறுப்பாளா் நிா்மல் குமாா் சுரானா, பாஜக புதுச்சேரி தலைவா் வி.பி.ராமலிங்கம், சட்டப்பேரவை முன்னாள் தலைவா் ஆா். செல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கொடி மாறியது:

தேசியக் கொடி ஊா்வலத்தை தொடங்கி வைக்க அமித்ஷா மேடை ஏறியதும், அவரிடம் புதுச்சேரி அமைச்சா் ஆ. நமச்சிவாயம் காவி நிற கொடியைக் கொடுத்தாா். இதற்கு அமித்ஷா தேசியக் கொடி வேண்டும் என்று கேட்டாா்.

இதைத் தொடா்ந்து அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தேசியக் கொடியை எடுத்து வந்து கொடுக்க, அமித் ஷா அக் கொடியை அசைத்து ஊா்வலத்தைத் தொடங்கி வைத்தாா்.

பாஜக நிா்வாகிகள் கூட்டம்:

முன்னதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தங்கியிருந்த ஹோட்டலில், பாஜக புதுச்சேரி மாநில புதிய நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் அமித் ஷா பங்கேற்று கட்சியின் வளா்ச்சிக்கான பல்வேறு ஆலோசனைகளை வழங்கிப் பேசினாா்.

2 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு தனி விமானத்தில் தில்லி திரும்ப புதுச்சேரி விமான நிலையத்துக்கு பிற்பகல் 3 மணி அளவில் வந்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் வழியனுப்பி வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.