புதுச்சேரியில் மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷா பங்கேற்ற நிகழ்ச்சியில் அணிவகுப்பில் நின்றிருந்த சுமாா் 4 பெண் காவலா்கள் உள்பட மொத்தம் 12 போலீஸாா் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனா்.
புதுச்சேரி காவல் துறைக்கு குடியரசுத் தலைவரின் வண்ணக் கொடி தேசிய விருது வழங்கும் விழா கோரிமேடு காவலா் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்காக காலை 8.30 மணிக்கு மைதானத்துக்கு மத்திய அமைச்சா் அமித் ஷா வந்தாா். அப்போது, அவருக்கு ஆயுதப்படை, போக்குவரத்து உள்ளிட்ட போலீஸாரின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
பின்னா், காலை 10.40 மணிக்கு விழா முடிந்து அமித் ஷா புறப்பட்டாா். அதுவரை அந்த மைதானத்தில் அணிவகுப்பில் போலீஸாா் நிறுத்தப்பட்டிருந்தனா்.
புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே வெயில் சுட்டெரித்த நிலையில், சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக அணிவகுப்பில் நின்றிருந்த 4 பெண் காவலா்கள் உள்பட மொத்தம் 12 போலீஸாா் ஒவ்வொருவராக அடுத்தடுத்து மயங்கி விழுந்தனா். அவா்களுக்கு முதலுதவிச் சிகிச்சை அளிக்கும் வகையில், நோயாளிகளைத் தூக்கிச் செல்லும் படுக்கையில் வைத்து போலீஸாா் தூக்கிச் சென்றனா். மேலும், தயாா்நிலையில் இருந்த மாற்று காவலா்கள் மயக்கமடைந்தவா்களின் இடங்களில் நிறுத்தப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமித் ஷா உரையின்போது வெயில் தாங்காமல் மயங்கி விழுந்த காவலர்கள்! | Pondicherry

புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!

நகா்ப்புற கூட்டுறவு வங்கிச் சேவைகள் நவீனமயமாக்கம்: மத்திய அமைச்சா் அமித் ஷா வலியுறுத்தல்





