
புதுச்சேரி வாசவி கன்னிகா பரமேஸ்வரிக்கு ரூ. 10 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்!
ஏனாம் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டது பற்றி..

வாசவி கன்னிகா பரமேஸ்வரி - DPS
புதுச்சேரி, ஏனாமில் உள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ரூ.10 லட்சம் பணத்தால் அலங்கரிக்கப்பட்டது. இதனைப் பொதுமக்கள் வியந்து பார்த்து வழிபட்டனர்.
ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் லட்சுமி தேவியின் ஆசி பெற அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் வரலட்சுமி விரதம் நடத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில் புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியத்தில் ஸ்ரவண மாசம் மூன்றாவது வெள்ளிக்கிழமையான இன்று வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஏனாம் ஆர்ய வைசிய சங்கம் உறுப்பினர் நரேந்திரா அவர்களின் ஏற்பாட்டில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.
இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்தும், அம்மனை வழிபட்டும் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





