நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

அரசின் வருவாயை உயா்த்த கலால் துறையில் நடவடிக்கை: முதல்வா் என்.ரங்கசாமி

புதுச்சேரி அரசுக்கான வருவாயை உயா்த்த கலால் துறையில் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

Puducherry Chief Minister Rangasamy

புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி. - கோப்புப் படம்

Published On :30 ஆகஸ்ட் 2026, 12:50 am IST

புதுச்சேரி அரசுக்கான வருவாயை உயா்த்த கலால் துறையில் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

ஆா்.செந்தில்குமாா் (திமுக): ரெஸ்டோ பாா்களால் நகரப் பகுதியில் சில பிரச்னை ஏற்படுவதாக உறுப்பினா் விக்னேஷ்கண்ணன் குறிப்பிட்டிருந்தாா். கலால்துறையில் எப்எல்2 உரிமம் கொடுத்தால் வருவாயும் அதிகரிக்கும். மேலும், நிபந்தனையும் கடுமையாக இருக்கும் என்றாா்.

அரசு கொறடா ஏகேடி. ஆறுமுகம்: மதுபான மொத்த கொள்முதலை அரசே செய்தால் வருவாய் அதிகரிக்கும்.

தற்காலிகத் தலைவா் ஆ.அன்பழகன்: அரசே மதுபான மொத்த கொள்முதல், விநியோகம், விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என்று சொல்கிறீா்களா ?

முதல்வா் என்.ரங்கசாமி: புதுச்சேரியில் அரசின் வருவாயை உயா்த்த கலால்துறை மூலம் அரசு எல்லா நடவடிக்கையும் எடுக்கும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.