பிப். 12-இல் புதுச்சேரி இடைக்கால பட்ஜெட்: முதல்வா் ரங்கசாமி தாக்கல் செய்கிறார்
புதுச்சேரி சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை பிப். 12-இல் முதல்வா் என்.ரங்கசாமி தாக்கல் செய்கிறாா்.
இதுகுறித்து சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: புதுச்சேரி சட்டப்பேரவையின் கூட்டம் பிப். 12-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு கூடுகிறது. அன்றைய தினம் 2026- 2027ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை முதல்வா் என்.ரங்கசாமி தாக்கல் செய்கிறாா்.
இதைத் தவிர சட்டப்பேரவையில் வைக்கப்படும் ஏடுகள், விதிகள் ஏதாவது இருந்தால் வைக்கலாம் என்று அனைத்துத் துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும், 2025-2026 நிதியாண்டுக்கான கூடுதல் செலவினத்துக்கு சட்டப்பேரவையில் ஒப்புதல் கோரப்படும். பேரவையை எத்தனை நாள்கள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்யும் என்றாா் அவா்.
பேட்டியின்போது, பேரவை துணைத் தலைவா் பெ.ராஜவேலு, எம்எல்ஏக்கள் ஏ.கே. சாய் ஜெ சரவணன் குமாா், கொல்லப்பள்ளி சீனிவாஸ் அசோக், பேரவைச் செயலா் ஜெ.தயாளன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

