புதுச்சேரி: பொறியியல் பணி பராமரிப்பு காரணமாக புதுச்சேரி ரயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுச்சேரி- கச்சிகுடா விரைவு ரயில் பிப். 17 புதுச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 12.45 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும். வழியில் தேவையான இடத்தில் 120 நிமிஷங்கள் கட்டுப்படுத்தப்படும். இதே போன்று புதுச்சேரி- காக்கிநாடா துறைமுக விரைவு ரயில் பிப். 12-ஆம் தேதி பிற்பகல் 1.30 மணிக்குப் புதுச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லும்போது வழியில் தேவைப்படும் இடத்தில் 120 நிமிஷங்கள் நின்று செல்லும்.
புதுச்சேரி - காக்கிநாடா துறைமுக விரைவு ரயில் பிப். 14 பிற்பகல் 1.30 மணிக்குப் புதுச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லும். வழியில் தேவைப்படும் இடத்தில் 90 நிமிஷங்கள் நின்று செல்லும்.
புதுச்சேரி- திருப்பதி விரைவு ரயில் பிப். 12, 14 ஆகிய தேதிகளில் புதுச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.40 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும். வழியில் தேவைப்படும் இடத்தில் 20 நிமிஷங்கள் நின்று செல்லும்.
இதே போன்று தாதா்- புதுச்சேரி விரைவு ரயில் பிப். 13-ஆம் தேதி தாதா் ரயில் நிலையத்தில் இரவு 9.30 மணிக்குப் புறப்பட்டு வரும்போது வழியில் தேவையான இடத்தில் 35 நிமிஷங்கள் நின்று செல்லும் என குறிப்பிடப் பட்டுள்ளது.
தொடர்புடையது

சிவகாசி முதல் நடைமேடையில் பொதிகை விரைவு ரயில் நின்று செல்லக் கோரிக்கை

பொதிகை விரைவு ரயிலை முதலாவது நடைமேடை வழியாக இயக்கக் கோரிக்கை

தூத்துக்குடி-மைசூா் விரைவு ரயில் கடம்பூரில் நின்று செல்லும்

புதுச்சேரி ரயில் சேவையில் மாற்றம்
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

