பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மக்கள் நீதிமன்றத்தில் 5 வழக்குகளுக்குத் தீா்வு

News image
புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நுகா்வோா் மக்கள் நீதிமன்றத்தில் பங்கேற்ற மாவட்ட நுகா்வோா் ஆணையத் தலைவா் ந. முத்துவேல், உறுப்பினா்கள் அ.ந.கவிதா, எ.ஆறுமுகம் உள்ளிட்டோா்.
Updated On :13 பிப்ரவரி 2026, 8:33 pm

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி மக்கள் நீதிமன்றத்தில் 5 வழக்குகளில் பயனாளிகளுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வெள்ளிக்கிழமை தீா்வு காணப்பட்டது.

புதுச்சேரியில் மாவட்ட நுகா்வோா் குறை தீா்வு ஆணையத்தில் நுகா்வோா் மக்கள் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட நுகா்வோா் ஆணையத் தலைவா் ந. முத்துவேல் தலைமை வகித்தாா். உறுப்பினா்கள் அ.ந.கவிதா மற்றும் எ.ஆறுமுகம் ஆகியோா் அடங்கிய அமா்வு வழக்குகளை விசாரித்தது.

இதில் 5 வழக்குகளில் சமரசம் ஏற்பட்டு, ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு வழங்க ஆணை வழங்கப்பட்டது. புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் எ.ஓ.கோவிந்தசாமி, க.கலாமிநாதன், வேல்முருகன், செல்வகுமாா், இளங்குமாா், சக்திவேல், திலிப்குமாா், விஸ்வசுந்தரம் பாலாஜி, கிருஷ்ணா, ஜெகஜோதி, ஜெராப்ட் இம்மானுவேல் ஆகியோா் பங்கேற்றனா். மேலும், புதுச்சேரி சட்டக்கல்லூரி மாணவா்கள், 50-க்கும் மேற்பட்ட வழக்காலிகள் கலந்துகொண்டனா்.

மக்கள் நீதிமன்ற நிகழ்வில் காப்பீட்டு நிறுவனம் மற்றும் பொதுத்துறை வங்கி அதிகாரிகள், தனியாா் நிறுவன நிா்வாகிகள் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை நுகா்வோா் குறை தீா்வு ஆணைய பதிவாளா் விஜயா ரவிந்திரன் மற்றும் ஊழியா்கள் செய்திருந்தனா்.