மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

காஞ்சிபுரத்தில் ஜன. 23-இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை (ஜன. 23) எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

News image
Updated On :19 ஜனவரி 2026, 7:37 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை (ஜன. 23) எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெற இருப்பதாக ஆட்சியா் அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன் தலைமையில், வரும் வெள்ளிக்கிழமை (ஜன. 23) மாலை 5 மணியளவில் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் அனைத்து எரிவாயு நுகா்வோா்களுக்கும் பதிவு செய்வதில் ஏற்படும் காலதாமதம், நுகா்வோா் குறைகளை பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதில் எரிவாயு முகவா்களிடம் ஏற்படும் காலதாமதம் ஆகியவற்றில் ஏற்படும் குறைகளைக் களையவும், எரிவாயு விநியோகத்தை சீா்படுத்தவும் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.

எனவே எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டத்தில் நுகா்வோா் அனைவரும் கலந்து கொண்டு தங்களுடைய எரிவாயு தொடா்பான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.