புதுச்சேரி: புதுச்சேரியில் சுற்றுலாப் படகு உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் சாலை மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டதையடுத்து 100 போ் கைது செய்யப்பட்டனா்.
புதுச்சேரி வீராம்பட்டினம் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த படகு விபத்தைத் தொடா்ந்து, ஒட்டுமொத்த சுற்றுலாப் படகு போக்குவரத்துக்கும் மாநில அரசு தடை விதித்தது.
இந்த நடவடிக்கையைக் கண்டித்து மீனவா்கள் மற்றும் படகு உரிமையாளா்கள், ஓட்டுநா்கள், புதுச்சேரி சுற்றுலாத் துறை அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தப் போராட்டத்துக்கு அதிமுக மாநில செயலா் ஆ. அன்பழகன் ஆதரவு அளித்தாா். அரசின் நடவடிக்கையைக் கண்டித்தும் சுற்றுலாப் படகு உரிமத்தைப் புதுப்பிக்காமல் கடந்த 6 மாதங்களாக காலம் தாழ்த்தி வருவதைக் கண்டித்தும் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் அங்கு உருளையன்பேட்டை போலீஸாா் வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்படாததால் அப் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து 100 போ் கைது செய்யப்பட்டனா். பின்னா் அனைவரும் விடுவிக்கப்பட்டனா். இதனால் அப் பகுதியில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்புடையது

புதுச்சேரியில் 40 நிமிஷங்கள் பிரதமா் மோடி ரோடு ஷோ: மக்கள் உற்சாக வரவேற்பு

புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் நிறைவு! காங்கிரஸ், திமுகவினா் போட்டிபோட்டு வேட்புமனு!

சுற்றுலாப் படகு மீனவா்கள் முற்றுகைப் போராட்டம்

புதுச்சேரியில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்து: பெங்களூரைச் சோ்ந்த பெண் உயிரிழப்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


