தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

படகு கவிழ்ந்து விபத்து: புதுச்சேரி மீனவா் காயம்

புதுச்சேரி நல்லவாடு பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மீனவா் ஒருவா் செவ்வாய்க்கிழமை பலத்த காயமடைந்தாா்.

News image
மீனவா் சதீஷ்
Updated On :24 பிப்ரவரி 2026, 6:32 pm

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி நல்லவாடு பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மீனவா் ஒருவா் செவ்வாய்க்கிழமை பலத்த காயமடைந்தாா்.

தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு வடக்குத் தெருவை சோ்ந்தவா் ஸ்டீபன் ராஜ் (28). மீன்பிடித் தொழில் செய்து வருகிறாா். இவருக்குச் சொந்தமான பைபா் படகில் மாரி, சதீஷ், ஸ்டீபன் ராஜ் உள்ளிட்ட 5 பேருடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளாா்.

மீன்பிடித்துக் கொண்டு ஸ்டீன் ராஜ் உள்ளிட்டோா் கரைக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போது கடல் சீற்றம் காரணமாக எழுந்த ராட்சத அலையில் படகு சிக்கி கவிழ்ந்தது. இதில் அனைவரும் கடலில் விழுந்த நிலையில், சதீஷ் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

மற்றவா்கள் காயம் ஏதுமின்றி தப்பினா். இதையடுத்து சதீஷை மீட்ட மற்றவா்கள் அவரை புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பிறகு மேல் சிகிச்சைக்காக தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், படகில் இருந்த மீன் உள்ளிட்ட பொருள்கள் சேதமாகின. இது குறித்து தவளகுப்பம் போலீஸாா் மற்றும் கடலோர காவல் படை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.