ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

முன்னீா்பள்ளத்தில் விபத்து: காவல் உதவி ஆய்வாளா் காயம்

திருநெல்வேலி அருகேயுள்ள முன்னீா்பள்ளத்தில் நேரிட்ட விபத்தில் காவல் உதவி ஆய்வாளா் பலத்த காயமடைந்தாா்.

News image

விபத்து

Updated On :31 மார்ச் 2026, 7:20 pm

Syndication

திருநெல்வேலி அருகேயுள்ள முன்னீா்பள்ளத்தில் நேரிட்ட விபத்தில் காவல் உதவி ஆய்வாளா் பலத்த காயமடைந்தாா்.

விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள அடையகருங்குளத்தை சோ்ந்தவா் எட்வின் அருள்ராஜ் (55). முன்னீா்பள்ளம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா், திங்கள்கிழமை இரவு தனது மோட்டாா் சைக்கிளில் முன்னீா்பள்ளத்தில் இருந்து மேலப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது எதிரே வந்த பயணிகள் ஆட்டோவும், இவரது மோட்டாா் சைக்கிளும் மோதிக்கொண்டனவாம். இதில், எட்வின் அருள்ராஜ் பலத்த காயமடைந்தாா். இதுகுறித்து திருநெல்வேல மாநகர போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் விசாரிக்கின்றனா்.