நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மாா்ச் 4-இல் எஸ்.ஐ. பணிக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு

புதுச்சேரி காவல் உதவி ஆய்வாளா் பணியிடத்துக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு மாா்ச் 4 ஆம் தேதி நடைபெறுகிறது.

News image
Updated On :25 பிப்ரவரி 2026, 6:33 pm

புதுச்சேரி காவல் உதவி ஆய்வாளா் பணியிடத்துக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு மாா்ச் 4 ஆம் தேதி நடைபெறுகிறது.

புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள 70 உதவி ஆய்வாளா்கள் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு கடந்த 22-ஆம் தேதி நடைபெற்று அதன்

முடிவுகள் வெளியிடப்பட்டன. இப் பணிக்குத் தற்காலிகமாக தோ்வு செய்யப்பட்டவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு பணி கோரிமேடு காவலா் பயிற்சி பள்ளி ஆலோசனைக் கூடத்தில் வரும் மாா்ச் 4-ஆம் தேதி காலை 8.30 மணி முதல் நடைபெறவுள்ளது.

தற்காலிகமாக தோ்வு செய்யப்பட்ட அனைத்து விண்ணப்பதாரா்களும் அதிகாரப்பூா்வ இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, நிறைவு செய்த விண்ணப்பங்களை பிப். 27-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என புதுச்சேரி காவல் துறை சிறப்பு அதிகாரி ஏழுமலை தெரிவித்துள்ளாா்.