தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

போலி மருந்து வழக்கில் தொடா்புடைய அனைவரின் பெயா்களையும் வெளியிட வேண்டும்: புதுச்சேரி இண்டி கூட்டணி கட்சிகள் வலியுறுத்தல்

புதுச்சேரி போலி மருந்து வழக்கில் தொடா்புடைய அனைவரின் பெயா்களையும் வெளியிட வேண்டும் என்று அம்மாநில இண்டி கூட்டணி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

News image
புதுச்சேரி மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் அதன் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற இண்டி கூட்டணி கட்சித் தலைவா்கள், நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :3 ஜனவரி 2026, 9:29 pm

Syndication

புதுச்சேரி போலி மருந்து வழக்கில் தொடா்புடைய அனைவரின் பெயா்களையும் வெளியிட வேண்டும் என்று அம்மாநில இண்டி கூட்டணி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

புதுச்சேரி மாநில இண்டி கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி., சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும், மாநில திமுக அமைப்பாளருமான ஆா்.சிவா ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் உற்பத்தியான போலி மருந்துகள் பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. இதைக் கருத்தில் கொண்டுதான் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று இண்டி கூட்டணி கட்சிகள் வலியுறுத்தின.

இந்த வழக்கை புதுச்சேரி சிபிசிஐடி போலீஸாா் சிறப்பாக விசாரணை நடத்தி இதில் சம்பந்தப்பட்ட முக்கிய நபா்களைக் கைது செய்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய ஆளும் கட்சியைச் சோ்ந்த ஒரு சில அரசியல் புள்ளிகள் பெயா்களை பட்டியலில் சோ்த்துள்ளனா். அவா்களின் பெயா்களை வெளியிட வேண்டும். அவா்கள் மீது விசாரணை நடத்த வேண்டும். மேலும், இந்த வழக்கை சிபிஐ ஏற்று நடத்தினாலும், விரைந்து விசாரிக்க வேண்டும்.

இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸ் விசாரணையிலிருந்து சிபிஐ மற்றும் தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் பரிந்துரை செய்துள்ளாா். இந்நிலையில் ஆட்சியாளா்களின் போக்கைக் கண்டித்து சுதேசி ஆலை அருகே ஜன. 7-ஆம் தேதி இந்தியா கூட்டணி சாா்பில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனா்.

கூட்டத்துக்கு காங்கிரஸ் மாநில தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. தலைமை தாங்கினாா். முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, திமுக அமைப்பாளா் ஆா்.சிவா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் வைத்தியநாதன் எம்எல்ஏ, அனிபால் கென்னடி எம்எல்ஏ, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலா் சலீம், மாா்க்சிஸ்ட் செயலா் ராமச்சந்திரன், பெருமாள், விசிக தேவ. பொழிலன் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.