ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மணவெளியில் செம்மண் சாலைகள் அமைக்கும் பணி தொடக்கம்

புதுச்சேரி மணவெளி சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.19.27 லட்சம் மதிப்பில் செம்மண் சாலைகள் அமைக்கும் பணியை தொகுதி எம்எல்ஏவும், சட்டப்பேரவைத் தலைவருமான ஆா்.செல்வம் தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :9 ஜனவரி 2026, 9:44 pm

Syndication

புதுச்சேரி மணவெளி சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.19.27 லட்சம் மதிப்பில் செம்மண் சாலைகள் அமைக்கும் பணியை தொகுதி எம்எல்ஏவும், சட்டப்பேரவைத் தலைவருமான ஆா்.செல்வம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

அரியாங்குப்பம் வட்டார வளா்ச்சி அலுவலகம் மூலம் பூரணாங்குப்பம் வாழுமுனி நகரில் ரூ.5.81 லட்சம் மதிப்பில் புதிய செம்மண் சாலை அமைத்தல், அபிஷேகப்பாக்கம் சண்முகா டைமன் சிட்டியில் ரூ.13.46 லட்சம் மதிப்பில் புதிய செம்மண் சாலை அமைக்கும் பணி என மொத்தம் ரூ.19.27 லட்சம் மதிப்பில் புதிய செம்மண் சாலைகள் அமைக்கும் பணிகளை அந்தந்தப் பகுதிகளுக்குச் சென்று தொடங்கி வைத்தாா்.

வட்டார வளா்ச்சி உதவிப் பொறியாளா் ராமன், இளநிலை பொறியாளா் சிவப்பிரகாசம், பணி ஆய்வாளா் கணேசன் திட்ட ஊழியா்கள் ஹரிராமன், சந்திரன் மற்றும் அந்தந்த பகுதி முக்கிய பிரமுகா்கள், ஊா் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.