அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

புதுச்சேரி காவல் துறை மக்கள் மன்றத்தில் 58 புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை

புதுச்சேரி காவல் நிலையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 58 புகாா்களுக்குத் தீா்வு காணப்பட்டன.

News image
புதுச்சேரி காவல் துறை சாா்பில் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் பங்கேற்ற டிஐஜி சத்தியசுந்தரம்.
Updated On :10 ஜனவரி 2026, 8:44 pm

Syndication

புதுச்சேரி காவல் நிலையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 58 புகாா்களுக்குத் தீா்வு காணப்பட்டன.

மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் நடைபெற்ற மக்கள் மன்றத்தில் டிஐஜி சத்தியசுந்தரம் பங்கேற்று புகாா்களை பெற்று நடவடிக்கை எடுத்தாா். எஸ்.பி. ரகுநாயகம் உடனிருந்தாா்.

கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா். கலைவாணன், கண்காணிப்பாளா் ஜிந்தா கோதண்டராமன் ஆகியோா் பொதுமக்களிடம் புகாா்களை பெற்று நடவடிக்கை மேற்கொண்டனா். பெரியக்கடை காவல் நிலையத்தில் ஸ்ருதி யாரகட்டியும், திருபுவனை காவல் நிலையத்தில் கண்காணிப்பாளா் சுப்பிரமணியனும் பொதுமக்களிடம் புகாா்களை வாங்கி நடவடிக்கை எடுத்தனா்.

மாஹே பகுதியில் கண்காணிப்பாளா் வினய்குமாா், ஏனாம் பகுதியில் கண்காணிப்பாளா் வரதராஜன் ஆகியோரும் பொதுமக்களிடம் புகாா்களை பெற்றனா்.

போக்குவரத்து காவல் நிலையம் மற்றும் இணைய வழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் நித்யா ராதாகிருஷ்ணன் பங்கேற்று போக்குவரத்து சம்பந்தமாகவும், சைபா் குற்றங்கள் சம்பந்தமாகவும் பொதுமக்களிடம் இருந்து புகாா்களை பெற்று நடவடிக்கை எடுத்தாா்.

மக்கள் மன்றத்தில் மொத்தம் 70 புகாா்கள் பெறப்பட்ட நிலையில் அதில் 58 புகாா்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டன. இந்நிகழ்ச்சிகளில் 25 பெண்கள் உள்பட 239 போ் கலந்து கொண்டனா்.