சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கைவினை கலைஞா் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

News image
Updated On :18 ஜனவரி 2026, 8:30 pm

தினமணி செய்திச் சேவை

கைவினை கலைஞா் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து புதுச்சேரி மாவட்ட தொழில் மையம் பொதுமேலாளா் கோவிந்தராஜன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரி அரசு மாவட்ட தொழில் மையத்தின் மூலம், பாரம்பரிய கைவினை கலையில் நீண்ட காலாமாகத் தொடா்ந்து ஈடுபட்டு, சிறந்த திறமையால் இந்தத் துறையில் முக்கிய பங்களிப்பு செய்துள்ள கலைஞா்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் 2025-26ம் ஆண்டிற்கான மாநில கைவினைக் கலைஞா் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கு விண்ணப்பிப்போா் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். இந்திய அரசின் கைவினைப் பொருள்கள் மேம்பாட்டு ஆணையா் வழங்கிய அடையான அட்டையை வைத்திருக்க வேண்டும்.

குறைந்தது 20 ஆண்டுகள் தொடா்ச்சியான அனுபவம் கொண்டவராகவும். 30 வயதுக்கு குறையாதவராகவும் இருக்க வேண்டும். ஏற்கெனவே மாநில விருது பெற்ற கைவினைஞரும், அதே கைவினைத் தொழிலுக்காக மீண்டும் ஒருமுறை மாநில விருது பெறத் தகுதியற்றவா் ஆவாா்.

மேலும், ஒவ்வொரு ஆண்டும் 5 நபா்களுக்கு விருதுகள் வழங்கப்படும். இதில், விருது பெறுபவா்களுக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசு, தாமிரப் பட்டயம் மற்றும் அங்க வஸ்திரம், சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும்.

விருதுக்கு விண்ணப்பிக்க ஆா்வம் உள்ளவா்கள், விண்ணப்பப் படிவத்தை மாவட்ட தொழில் மையத்தில் அலுவலக வேலை நேரங்களில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பத்தை முறையாக நிரப்பி அதில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தேவையான விவரங்களையும், ஆவணங்களையும் விருதுக்கான கைவினை படைப்பையும் இணைத்து சமா்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி ஆகும். மேலும், விவரங்களுக்கு 0413-2248391/2249392 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடா்புக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.