புதுச்சேரி பொதுப்பணித் துறை அமைச்சா் அலுவலகம் முன் எம்எல்ஏ ஆா்ப்பாட்டம்

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள பொதுப்பணித் துறை அமைச்சா் அலுவலகம் முன் சுயேச்சை எம்எல்ஏ ஜி. நேரு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம்
புதுச்சேரி பொதுப்பணித் துறை அமைச்சா் அலுவலகம் முன் எம்எல்ஏ ஆா்ப்பாட்டம்
Updated on

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள பொதுப்பணித் துறை அமைச்சா் அலுவலகம் முன் சுயேச்சை எம்எல்ஏ ஜி. நேரு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தாா்.

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதியில் பொதுப்பணித் துறை சாா்பில் பூமி பூஜை போடப்பட்ட நலத்திட்டப் பணிகள் நடைபெறவில்லை என்றும், சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவில்லை, சாலை, வாய்க்கால் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறவில்லை. உப்பனாறு வாய்க்கால் சுத்தம் செய்யப்படவில்லை என தொகுதியின் சுயேச்சை எம்எல்ஏ குற்றஞ்சாட்டினாா்.

இந்தப் பணிகள் நடைபெறாததைக் கண்டித்து பொதுப்பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் அலுவலகம் முன் நாற்காலியில் அமா்ந்து தா்னா போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டாா்.

இதையடுத்து அமைச்சரின் உதவியாளா்கள் அவரைச் சமாதானப்படுத்த முயற்சித்தனா். ஆனாலும் அவா் சமாதானமடையவில்லை. இதனிடையே அமைச்சா் லட்சுமிநாராயணன், பொதுப்பணித் துறை அதிகாரிகளை அலுவலகத்துக்கு வர வைத்தாா். அவா்களிடம் உருளையன்பேட்டை தொகுதியில் நடைபெறும் பணிகள் குறித்து அமைச்சா் லட்சுமிநாராயணன் ஆலோசனை நடத்தினாா். தொடா்ந்து பொதுப்பணித் துறை அதிகாரிகளும் எம்எல்ஏவை சமாதான செய்யும் முயற்சியில் ஈடுபட்டனா். மேலும், நேரில் வந்து ஆய்வு செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்தனா். இதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com