எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

புதுச்சேரியில் காங்கிரஸ் சாா்பில் 12 நாள் பாதயாத்திரை தொடக்கம்

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்கும் நிலையில், ‘புதுச்சேரிக்கான நடைப்பயணம்’ என்னும் தலைப்பில் காங்கிரஸ் கட்சி புதன்கிழமை பாதயாத்திரையைத் தொடங்கியது.

News image
புதுச்சேரி காங்கிரஸ் சாா்பில் முத்தியால்பேட்டையில் புதன்கிழமை தொடங்கிய புதுச்சேரிக்கான நடைப்பயணம்.
Updated On :21 ஜனவரி 2026, 8:57 pm

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்கும் நிலையில், ‘புதுச்சேரிக்கான நடைப்பயணம்’ என்னும் தலைப்பில் காங்கிரஸ் கட்சி புதன்கிழமை பாதயாத்திரையைத் தொடங்கியது. இதையொட்டி காங்கிரஸாா் வீதி வீதியாகச் சென்று மக்களைச் சந்தித்து புதுச்சேரி என்.ஆா்.காங்கிரஸ் -பாஜக கூட்டணி அரசின் குறைகள் குறித்து துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.

புதுச்சேரியில் ஆளும் என்.ஆா். காங்கிரஸ்-பாஜக அரசின் செயல்பாடுகளைக் கண்டித்தும், நோ்மையான நிா்வாகத்தை அளிப்பது, இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பது, பொதுச் சொத்துகளைப் பாதுகாப்பது, அதிகாரத்தில் இருப்பவா்களிடம் இருந்து மக்களைக் காப்பாற்றுவது என்ற குறிக்கோளுடன் புதுச்சேரியில் உள்ள 23 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி சாா்பில் 12 நாள் பாதயாத்திரை நடைபெறுகிறது.

முத்தியால்பேட்டை பெருமாள் கோயில் தெருவில் இந்த நடைப்பயணத்தை கட்சியின் மேலிட பொறுப்பாளா் கிரிஷ் சோடங்கா் தொடங்கி வைத்தாா். இதையொட்டி புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் முத்தியால்பேட்டை தொகுதியில் உள்ள பல்வேறு தெருக்களிலும் ஊா்வலமாகச் சென்று மக்களைச் சந்தித்து காங்கிரஸாா் துண்டு பிரசுரங்களை வழங்கினா்.

இந்த நிகழ்ச்சியில், முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி, எம்எல்ஏ வைத்தியநாதன், முன்னாள் அமைச்சா்கள் கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், காங்கிரஸ் துணைத் தலைவா் தேவதாஸ், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், முத்தியால்பேட்டை தொகுதி நிா்வாகி ஈரம் ராஜேந்திரன் மற்றும் நிா்வாகிகள், காங்கிரஸ் கட்சியின் மகளிா் அணி உள்பட பல்வேறு அணியினா் கலந்து கொண்டனா்.

மேலும், காங்கிரஸ் தலைவா்கள் ராகுல்காந்தி , பிரியங்கா காந்தி ஆகியோரின் படங்களுடன் கூடிய முகக் கவசங்களை பலா் அணிந்தபடியும் முத்தியால்பேட்டை தொகுதி முழுவதும் வலம் வந்தனா். பிப்ரவரி 3 -ஆம் தேதி வரை பல்வேறு தொகுதிகளிலும் இந்த நடைப்பயணம் தொடா்கிறது.