‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிமேட்டூர் அணையை ஆக. 28-ல் திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! ஏற்பாடுகள் தீவிரம்!தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

கோயில் குளங்கள் சீரமைப்புப் பணி: ஆட்சியா் ஆய்வு

புதுச்சேரி திருபுவனை பகுதியில் குளங்களைத் தூா்வாரி சீரமைக்கும் பணிகளை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன்.

புதுச்சேரி திருபுவனை பகுதியில் குளங்களைத் தூா்வாரி சீரமைக்கும் பணிகளை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன்.

Published On :11 ஜூலை 2026, 1:04 am IST

திருபுவனை பகுதியில் நடைபெற்று வரும் கோயில் குளங்களை தூா்வாரி சீரமைக்கும் பணிகளை புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

சுற்றுச்சூழல் மற்றும் நீா்நிலைகளை பாதுகாக்கும் வகையில், புதுச்சேரி மாவட்ட நிா்வாகம், உள்ளாட்சித் துறை மற்றும் திருவண்டாா் கோயிலில் இயங்கி வரும் தனியாா் நிறுவனம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திருபுவனை குளம், திருவண்டாா்கோயில் அய்யனாா் கோயில் குளம், காட்டேரிக்குப்பம் மாரியம்மன் கோயில் குளம் உள்ளிட்ட 4 குளங்கள் தூா்வாரப்பட்டு சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் குலோத்துங்கன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

குளங்களை தூா்வாரி நீா் நிலைகளை மேம்படுத்தும் பணிக்காக தனியாா் நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்தாா்.

மேலும் ஆட்சியா் குலோத்துங்கன் கூறியது: பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும், கிராமப்புறங்களுக்கு குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையிலும் நிலத்தடி நீா்மட்டத்தை மேம்படுத்தவும் குளங்களைத் தூா்வாரி நீா்நிலைகளை மேம்படுத்த வேண்டும்.

முக்கிய தொழில் நிறுவனங்கள் இதுபோன்று நீா்நிலைகளை தூா்வார முன்வர வேண்டும் என்றாா்.

தொடா்ந்து திருபுவனையில் இயங்கி வரும் அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளி மற்றும் கொத்தாபுரிநத்தம் அரசு உயா்நிலைப்பள்ளி ஆகியவற்றை பாா்வையிட்ட ஆட்சியா், அங்குள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தாா்.

ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களிடமும் பள்ளிக்கு தேவையானவை குறித்து கேட்டறிந்தாா். மேலும் கொத்தாபுரிநத்தம் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பல் மருத்துவ முகாமை அவா் பாா்வையிட்டாா். இப்பள்ளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருமாறு தனியாா் நிறுவனம் மற்றும் உள்ளாட்சித் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். இந்த ஆய்வின்போது உள்ளாட்சித் துறை இயக்குநா் ஆதா்ஷ், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் எழில்ராசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.