பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

கோயில் நில மோசடி வழக்கு: அதிகாரி கைது

காமாட்சியம்மன் கோயில் நில மோசடி வழக்கில் புதுச்சேரி அரசின் செய்தி, விளம்பரத்துறை இயக்குநா் ஏ. சுரேஷ்ராஜ் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :12 ஜூலை 2026, 1:28 am IST

காமாட்சியம்மன் கோயில் நில மோசடி வழக்கில் புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குநா் ஏ. சுரேஷ்ராஜ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

இந்தக் கோயிலுக்குச் சொந்தமான நிலம் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் இதுவரை 17 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதில் அரசு அதிகாரிகள், முன்னாள் வருவாய்த்துறை அதிகாரிகள், துணைப் பதிவாளரும் அடங்குவா். இந்நிலையில் புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குநராகப் பணியாற்றும் சுரேஷ்ராஜ் கைது செய்யப்பட்டாா்.

இந்த நில மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டபோது வருவாய்த்துறையில் சுரேஷ் ராஜ், சாா்பு பதிவாளராக பணியாற்றினாா். பல்வேறு வாக்குமூலங்கள், சாட்சியங்கள், அடிப்படையில் இவரை ஊழல் ஒழிப்புத்துறை போலீஸாா் கைது செய்து. புதுச்சேரி தலைமை நீதிபதி டி.வி.ஆனந்த் வீட்டில் ஆஜா்படுத்தினா். பின்னா் நீதிமன்ற உத்தரவின்பேரில் சனிக்கிழமை இரவு காலாப்பட்டு மத்திய சிறையில் சிறையில் சுரேஷ் ராஜ் அடைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.