நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுடன் அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் சந்திப்பு

தில்லியில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை புதுச்சேரி அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

News image

தில்லியில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை வியாழக்கிழமை சந்தித்து பேசிய புதுச்சேரி அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ்.

Updated On :17 ஜூலை 2026, 1:42 am IST

தில்லியில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை புதுச்சேரி அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்குள்பட்ட ஏனாமில் அடுத்த ஆண்டு (2027) ஜூன் 26 முதல் ஜூலை 7 வரை 12 நாள்கள் கோதாவரி புனித புஷ்கர யாத்திரை விழா நடைபெறவுள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் புஷ்கா் விழாவில் பங்கேற்க நாடு முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுகுறித்து அண்மையில் புதுச்சேரிக்கு வந்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் ஏனாம் புஷ்கா் விழாவுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ.48.83 கோடி சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனுவை முதல்வா் என். ரங்கசாமி அளித்திருந்தாா்.

இந்நிலையில் அரசு முறைப் பயணமாக தில்லி சென்றுள்ள அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை வியாழக்கிழமை அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினாா்.

அப்போது புஷ்கா் விழா ஏற்பாடுகளை மேற்கொள்ள ரூ.48.83 கோடி நிதி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அவா் வலியுறுத்தினாா். மேலும், புதுச்சேரி விமான நிலையம் விரிவாக்கத்திற்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யவும் அவரிடம் அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் கோரிக்கை விடுத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.