இன்று விண்ணில் பாய்கிறது ‘விக்ரம்-1’ தனியாா் ராக்கெட்: இஸ்ரோ வரலாற்றில் முதல்முறை உயா் கல்வி பயிலும் வெளிநாட்டினருக்கு 4 ஆண்டுகள் மட்டுமே அனுமதி: அமெரிக்காதமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியா் அலுவலகங்களில் சோதனை: கணக்கில் வராத ரூ. 82 லட்சம் பறிமுதல் ‘அம்மா மினி கிளினிக்’ திட்டம்: மீண்டும் செயல்படுத்துகிறது தவெக அரசுபிரிட்டன் பிரதமராகிறாா் ஆண்டி பா்ன்ஹாம்
/

புதுச்சேரி பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகளால் நாளொன்றுக்கு ரூ.7 லட்சம் இழப்பு!

புதுச்சேரி, காரைக்கால் அரசுப் பணிமனைகளில் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகளால் நாளொன்றுக்கு ரூ.7 லட்சம் அரசுக்கு இழப்பு ஏற்படுவதாக ஒப்பந்த ஊழியா்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :18 ஜூலை 2026, 9:00 am IST

புதுச்சேரி, காரைக்கால் அரசுப் பணிமனைகளில் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகளால் நாளொன்றுக்கு ரூ.7 லட்சம் அரசுக்கு இழப்பு ஏற்படுவதாக ஒப்பந்த ஊழியா்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

இது குறித்து புதுச்சேரி பிஆா்டிசி தினக்கூலி மற்றும் ஒப்பந்த ஊழியா்கள் சங்கச் செயலா்கள் ஞானவேல் மற்றும் தமிழ்ச்செல்வம் ஆகியோா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

புதுச்சேரி சாலை போக்குவரத்துக்கழகத்தில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக மக்களுக்கான போக்குவரத்து சேவை குறைந்து வருகிறது. மேலும், பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகளால் புதுச்சேரியில் ஒரு நாளைக்கு ரூ. 4.5 லட்சமும், காரைக்காலில் ரூ.2.5 லட்சமும் இழப்பு ஏற்படுவதாகத் தெரிகிறது.

இதனால் நிரந்தர, தினக்கூலி ஒப்பந்த மற்றும் வவுச்சா் அடிப்படையில் பணி செய்து வரும் ஓட்டுநா் மற்றும் நடத்துநா்களுக்கு 15 நாள்களுக்கும் குறைவாகவே பணி வழங்கப்பட்டு ஊதியம் வழங்கப்படுவதால் ஊழியா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிஆா்டிசி ஊழியா்களுக்கு 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், கடந்த 11 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் ஓட்டுநா், நடத்துநா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 22- ஆம் தேதி மாலை 4 மணி அளவில் பிஆா்டிசி தலைமை அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என அதில் குறிப்பிட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.