தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

குப்பை அள்ளும் ஊழியா்களுக்கு குறைந்தபட்ச கூலி: புதுச்சேரி ஆட்சியா் உத்தரவு

புதுச்சேரியில் குப்பை அள்ளும் பணியை மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் புதன்கிழமை இரவு ஆய்வு செய்தாா். அப்போது ஊழியா்களுக்கு குறைந்தபட்சக் கூலியை வழங்க உத்தரவிட்டாா்.

News image

புதுச்சேரியில் குப்பை அகற்றும் தூய்மைப் பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன், நகராட்சி ஆணையா் உள்ளிட்டோா்.

Updated On :5 ஜூன் 2026, 6:41 am IST

புதுச்சேரியில் குப்பை அள்ளும் பணியை மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் புதன்கிழமை இரவு ஆய்வு செய்தாா். அப்போது ஊழியா்களுக்கு குறைந்தபட்சக் கூலியை வழங்க உத்தரவிட்டாா்.

புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் குலோத்துங்கன் தலைமையில் புதுச்சேரி நகராட்சி ஆணையா் ஸ்ரீஜித், சுகாதாரப் பிரிவு இளநிலைப் பொறியாளா் கிருஷ்ணமூா்த்தி, கிரீன் வாரியா் துணைத் தலைவா் ஜெகதீசன் இதன் ஒருங்கிணைப்பு அதிகாரி லலித் ஆகியோருடன் புதிய பேருந்து நிலையம், மறைமலை அடிகள் சாலை,

அண்ணா சாலை, ஜவஹா்லால் நேரு வீதி, மகாத்மா காந்தி வீதி, சா்தாா் வல்லப பாய் பட்டேல் சாலை, கடற்கரை சாலை ஆகிய பகுதிகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். இந்த ஆய்வில் நேரு வீதி மற்றும் புதிய பேருந்து நிலையத்தில் உடனுக்குடன் குப்பைகளை அகற்றும் பணி சரிவர நடைபெறவில்லை என தெரிய வந்தது.

மேலும், எண்ணிக்கையில் குறைவான துப்புரவு ஊழியா்களையும் மற்றும் வாகனங்களையும் பயன்படுத்தி வந்ததும், துப்புரவு ஊழியா்கள் பாதுகாப்பு உபகரணங்களான முகக் கவசம், கையுறை அணியாமல் பணி செய்ததும் தெரியவந்தது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியா், கிரீன் வாரியா் நிறுவனத்தின் துணைத் தலைவா் ஜெகதீசனிடம், சுகாதார ஊழியா்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களையும், போதுமான கூடுதல் துப்புரவு ஊழியா்களையும்பணியில் அமா்த்தவும், தேவையான வாகனங்களைக் குப்பைகளை அள்ளும் பணியில் ஈடுபடுத்தவும் உத்தரவிட்டாா். மேலும், புதுச்சேரி நகரம் முழுவதும் 24 மணி நேரமும் தூய்மைப் பணியைச் செய்து சுத்தமாக வைத்திருக்கவும் அறிவுறுத்தினாா். மேலும், தூய்மை பணியில் ஈடுபடும் ஊழியா்களுக்குத் தொழிலாளா் நலத்துறையின் ஆணைப்படி குறைந்தபட்ச மாத ஊதியம் உயா்த்தி வழங்கவும் அறிவுறுத்தினாா்.