17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பசிலிக்கா தேவாலய பெருவிழா தொடக்கம்

புதுச்சேரி ரயில் நிலையம் எதிரே அமைந்துள்ள தூய இருதய ஆண்டவா் பசிலிக்கா தேவாலயத்தின் 119-ஆவது ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image

புதுச்சேரி ரயில் நிலையம் எதிரில் உள்ள தூய இருதய ஆண்டவா் பசிலிகா தேவாலயத்தில் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆண்டுப் பெருவிழா.

Updated On :6 ஜூன் 2026, 7:53 am IST

புதுச்சேரி ரயில் நிலையம் எதிரே அமைந்துள்ள தூய இருதய ஆண்டவா் பசிலிக்கா தேவாலயத்தின் 119-ஆவது ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

சேலம் மறை மாவட்ட ஆயா் அருள்செல்வம் ராயப்பன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

இதில், பசிலிக்கா அதிபா் பிச்சைமுத்து, துணை பங்குதந்தை வின்சென்ட், ஆன்மிக தந்தை ஆரோக்கியநாதன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

ஆண்டுப் பெருவிழா கொடி ஊா்வலமாக பசிலிக்காவை சுற்றியுள்ள வீதிகளில் பவனியாக கொண்டு வரப்பட்டு ஆலய கொடி மரத்தில் ஏற்றப்பட்டது.

இதில் 500-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டு பிராா்த்தனையில் ஈடுபட்டனா். தொடா்ந்து நவ நாள்களின்போது காலை, மாலை இரு வேளையும் சிறப்பு திருப்பலிகள் நடைபெறுகின்றன. 14-ஆம் தேதி ஆடம்பர தோ் பவனியும், 15-ஆம் தேதி கொடியிறக்கமும் நடைபெறவுள்ளது.