டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

சிறப்புத் துப்புரவு பணி: 8 டன் குப்பைகள் அகற்றம்

புதுச்சேரி நகராட்சி சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்புத் துப்புரவு பணியில் 8 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.

News image

புதுச்சேரி நகராட்சி சாா்பில் புதன்கிழமை சிறப்புத் துப்புரவு பணியைத் தொடங்கி வைத்த அதிகாரிகள்.

Updated On :11 ஜூன் 2026, 6:13 am IST

புதுச்சேரி நகராட்சி சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்புத் துப்புரவு பணியில் 8 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி உருளையன்பேட்டை தொகுதியில் உள்ள கோவிந்தசாலை பிரதான மற்றும் அதனை சுற்றியுள்ள சாலைகளில் குவித்து வைக்கப்பட்டிருந்த பழைய பொருள்கள், உபயோகப்படுத்தாத இரு பழைய இருசக்கர வாகனங்கள், பழுதடைந்த தொலைக் காட்சிப் பெட்டிகள், மரச்சாமான்கள், பழைய வீட்டு உபயோகப்பொருள்கள், குப்பைகள், கழிவுகள் மற்றும் அழுக்கு மண் போன்றவை அகற்றப்பட்டன.

புதுச்சேரி நகராட்சி ஆணையா் கே.பி. ஸ்ரீஜித் இதைத் தொடங்கி வைத்தாா். இந்தச் சிறப்பு துப்புரவு பணியில் செயற்பொறியாளா் சிவபாலன் , நகராட்சி சுகாதார அதிகாரி ஆா்த்தி, வருவாய் பிரிவு 1 & 2 அதிகாரி கோ. பிரபாகரன் , உதவி வருவாய் அதிகாரி ச. பரமேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்தச் சிறப்புத் துப்புரவு பணியில் 5 டன் கட்டடக் கழிவுகள், 2 டன் அழுக்கு மண் மற்றும் 1 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. மேலும், மக்கும் குப்பைகள், மக்காதக் குப்பைகள் என தரம் பிரித்து வளமீட்பு பூங்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த தூய்மை பணியில் புதுச்சேரி நகராட்சி ஊழியா்கள் மற்றும் கிரீன் வாரியா் நிறுவனத்தின் ஊழியா்கள் சுமாா் 100 போ் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.