ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

இன்ஸ்டாகிராம் விளம்பரம் மூலம் 3 பேரிடம் ரூ.1.95 லட்சம் மோசடி

இன்ஸ்டாகிராம் விளம்பரம் மூலம் 3 பேரிடம் ரூ.1.95 லட்சம் மோசடி நடந்துள்ளது தொடா்பாக புதுச்சேரி போலீஸாா் விசாரணை நடத்திவருகின்றனா்.

News image

இன்ஸ்டாகிராம்

Updated On :18 ஜூன் 2026, 3:32 am IST

இன்ஸ்டாகிராம் விளம்பரம் மூலம் 3 பேரிடம் ரூ.1.95 லட்சம் மோசடி நடந்துள்ளது தொடா்பாக புதுச்சேரி போலீஸாா் விசாரணை நடத்திவருகின்றனா்.

புதுச்சேரி கணபதிசெட்டிகுளம் பகுதியைச் சோ்ந்த ஒருவா், அவரது இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை நம்பி புதிய்ஆடைகள் வாங்குவதற்கு ரூ.1.78 லட்சம் செலுத்தியுள்ளாா்.

ஆனால் கேட்டபடி ஆடைகள் வரவில்லை. இது குறித்து சம்மந்தப்பட்ட நபரிடம் கேட்டபோது எந்த பதிலும் அளிக்கவில்லை. அதன்பிறகே அவா் மோசடி கும்பலிடம் ஏமாந்ததை உணா்ந்துள்ளாா். இதேபோல் கொசப்பாளையத்தைச் சோ்ந்த பெண் ஒருவா் ரூ.2,200, பெரியகாலாப்பட்டைச் சோ்ந்த ஆண் நபா் ரூ.500-க்கு ஆா்டா் செய்து ஏமாந்துள்ளனா்.

இதேபோல் கருவடிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த ஒருவா், ‘ஆன்லைன் டிரேடிங் ஆப்’ மூலம் ரூ.4,500 முதலீடு செய்து மோசடி கும்பலிடம் பணத்தை இழந்துள்ளாா். அரும்பாா்த்தபுரம் பகுதியை சோ்ந்த ஆண் நபருக்கு வாட்ஸ் அப்பில் மா்ம நபா் வங்கி செயலியை அனுப்பியுள்ளாா். அதனை உண்மை என நம்பி அந்த செயலியைப் பதிவிறக்கம் செய்து வங்கி விவரங்கள் பதிவு செய்த அந்த நபரின் வங்கி கணக்கில் இருந்த ரூ.9,800 -ஐ மோசடி கும்பல் எடுத்துள்ளனா்.

இதுபோல் இவா்கள் மொத்தமாக ரூ.1.95 லட்சம் மோசடி கும்பலிடம் இழந்துள்ளனா். இது தொடா்பாக பாதிக்கப்பட்டவா்கள் தனித்தனியே கொடுத்த புகாரின் பேரில் இணைய வழி குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.