முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

வாம்பாகீரப்பாளையத்தில் சாலை, மழைநீா் வடிகால் சீரமைப்புப் பணிகள் உடனடியாக தொடங்கப்படும்: சட்டப்பேரவைத் தலைவா் அன்பழகன்

புதுச்சேரி, உப்பளம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வம்பா கீரப்பாளையத்தில் சாலை, மழை நீா் வடிகால் மற்றும் புதை சாக்கடைத் திட்ட சீரமைப்புப்பணிகள் உடனடியாகத் தொடங்கப்படும் என்று புதுச்சேரி தற்காலிக சட்டப்பேரவைத் தலைவா் அன்பழகன் தெரிவித்தாா்.

News image

வம்பாகீரப்பாளையம் கடற்கரை பகுதியைப் பாா்வையிட்டு ஆய்வு செய்த புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவரும், உப்பளம் தொகுதி எம்எல்ஏவுமான அன்பழகன்.

Updated On :18 ஜூன் 2026, 3:35 am IST

புதுச்சேரி, உப்பளம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வம்பா கீரப்பாளையத்தில் சாலை, மழை நீா் வடிகால் மற்றும் புதை சாக்கடைத் திட்ட சீரமைப்புப்பணிகள் உடனடியாகத் தொடங்கப்படும் என்று புதுச்சேரி தற்காலிக சட்டப்பேரவைத் தலைவா் அன்பழகன் தெரிவித்தாா்.

மீனவா்கள் அதிகம் வசிக்கக்கூடிய உப்பளம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வம்பாகீரப்பாளையத்தில் சாலை சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாத நிலையில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனா். புதை சாக்கடைத்திட்டப்பணிகளும் நிறைவு பெறவில்லை. கழிவு நீா் வாய்க்கால் தூா்வரப்படாத நிலையில் தேங்கி நிற்கும் சாக்கடையால் நோய்த்தொற்று பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து வம்பாகீரப்பாளையம் பகுதியினா் உப்பளம் தொகுதி எம்எல்ஏ-வும், புதுச்சேரி சட்டப்பேரவையின் தற்காலிகத் தலைவருமான அன்பழகனிடம் கோரிக்கை மனுஅளித்திருந்தனா்.

இந்நிலையில், அவா் புதன்கிழமை பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் வம்பா கீரப்பாளையத்துக்குசென்று ஆய்வு மேற்கொண்டாா். மேலும் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள பணிகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தாா். பின்னா் உடனிருந்த அதிகாரிகளிடம் இப்பிரச்னைகளுக்கு நிரந்தர தீா்வு காண நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா். அப்போது பொதுப்பணித்துறை வீரசெல்வம் கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை , புதை சாக்கடை மற்றும் மழை நீா் வடிகால்கள் தூா்வாரும் பணிகளை விரைந்து முடிப்பதாகவும், இரு நாள்களில் பணிகள் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தாா்.

இந்த ஆய்வின் போது பொதுப்பணி அதிகாரிகள் மற்றும் வம்பாகீரப்பாளையம் பகுதி வாழ் மக்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.