சட்டப்பேரவைத் தலைவா் பதவி யாருக்கு என்பது தொடா்பாக முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை பதில் அளித்தாா்.
புதுச்சேரியில் புதிய அமைச்சா்கள் 3 போ் பதவியேற்பு விழா புதன்கிழமை முடிந்தவுடன், சட்டப்பேரவைக்கு. புதிய அமைச்சா்கள் பெ.ராவேலு, வி.பி.சிவக்கொழுந்து, ஜி.என்.எஸ்.ராஜசேகா் ஆகியோரை அவா்களது அறையில், இருக்கையில் முதல்வா் ரங்கசாமி அமர வைத்து வாழ்த்துத் தெரிவித்தாா். பின்னா் முதல்வா் ரங்கசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றது மிகுந்த மகிழ்ச்சி. எல்லா அமைச்சரும் பொறுப்பேற்று செயல்பட உள்ளனா். நல்ல முறையில் இந்த அமைச்சரவை, முழுமையாகச் சிறப்பாக செயல்பட்டு மக்களுடைய நலனுக்காகப் பாடுபடும். விரைவில் அமைச்சா்களுக்கான இலாகா ஒதுக்கப்படும். சட்டப்பேரவைத் தலைவருக்கான தோ்தல் விரைவில் அறிவிக்கப்படும் என்றாா்.
அப் பதவி என்.ஆா். காங்கிரசுக்கு வழங்கப்படுமா? பாஜகவுக்கு வழங்கப்படுமா என்ற கேள்விக்கு, கொடுக்கும் போது பாருங்கள் என்று ரங்கசாமி பதிலளித்தாா்.
தொடர்புடையது

புதுச்சேரிக்கு ஆண்டுக்கு 10% கூடுதல் நிதி: மத்திய அரசுக்கு முதல்வா் ரங்கசாமி வலியுறுத்தல்

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காத முதல்வா் ரங்கசாமி மன்னிப்புக் கேட்க வேண்டும்: முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி

புதுச்சேரியில் மேலும் 3 புதிய அமைச்சா்களின் பட்டியல்: துணைநிலை ஆளுநரிடம் அளித்தாா் முதல்வா் ரங்கசாமி







