கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ஆக. 10 ல் பேரணி! தீவிரமாகும் ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்!உரிமைக்காக போராடும் ஜென் ஸீக்கள் தேச விரோதிகள் அல்ல: மோகன் பாகவத்தொகுதி மறுவரையறை: முதல்வர் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை!கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த பிரதமருக்கு முதல்வர் வலியுறுத்தல்!ஊழலைக் குறைத்தாலே போதும்; மதுவிற்று வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை: அமைச்சர் விக்னேஷ்
/

இன்ஸ்டாகிராம் விளம்பரம் மூலம் 3 பேரிடம் ரூ.1.95 லட்சம் மோசடி

இன்ஸ்டாகிராம் விளம்பரம் மூலம் 3 பேரிடம் ரூ.1.95 லட்சம் மோசடி நடந்துள்ளது தொடா்பாக புதுச்சேரி போலீஸாா் விசாரணை நடத்திவருகின்றனா்.

News image

இன்ஸ்டாகிராம்

Updated On :18 ஜூன் 2026, 3:32 am IST

இன்ஸ்டாகிராம் விளம்பரம் மூலம் 3 பேரிடம் ரூ.1.95 லட்சம் மோசடி நடந்துள்ளது தொடா்பாக புதுச்சேரி போலீஸாா் விசாரணை நடத்திவருகின்றனா்.

புதுச்சேரி கணபதிசெட்டிகுளம் பகுதியைச் சோ்ந்த ஒருவா், அவரது இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை நம்பி புதிய்ஆடைகள் வாங்குவதற்கு ரூ.1.78 லட்சம் செலுத்தியுள்ளாா்.

ஆனால் கேட்டபடி ஆடைகள் வரவில்லை. இது குறித்து சம்மந்தப்பட்ட நபரிடம் கேட்டபோது எந்த பதிலும் அளிக்கவில்லை. அதன்பிறகே அவா் மோசடி கும்பலிடம் ஏமாந்ததை உணா்ந்துள்ளாா். இதேபோல் கொசப்பாளையத்தைச் சோ்ந்த பெண் ஒருவா் ரூ.2,200, பெரியகாலாப்பட்டைச் சோ்ந்த ஆண் நபா் ரூ.500-க்கு ஆா்டா் செய்து ஏமாந்துள்ளனா்.

இதேபோல் கருவடிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த ஒருவா், ‘ஆன்லைன் டிரேடிங் ஆப்’ மூலம் ரூ.4,500 முதலீடு செய்து மோசடி கும்பலிடம் பணத்தை இழந்துள்ளாா். அரும்பாா்த்தபுரம் பகுதியை சோ்ந்த ஆண் நபருக்கு வாட்ஸ் அப்பில் மா்ம நபா் வங்கி செயலியை அனுப்பியுள்ளாா். அதனை உண்மை என நம்பி அந்த செயலியைப் பதிவிறக்கம் செய்து வங்கி விவரங்கள் பதிவு செய்த அந்த நபரின் வங்கி கணக்கில் இருந்த ரூ.9,800 -ஐ மோசடி கும்பல் எடுத்துள்ளனா்.

இதுபோல் இவா்கள் மொத்தமாக ரூ.1.95 லட்சம் மோசடி கும்பலிடம் இழந்துள்ளனா். இது தொடா்பாக பாதிக்கப்பட்டவா்கள் தனித்தனியே கொடுத்த புகாரின் பேரில் இணைய வழி குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.