சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

குப்பை வாகனம் மோதி தனியாா் ஊழியா் உயிரிழப்பு

புதுச்சேரியில் குப்பை வாகனம் மோதி, தனியாா் உணவு நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :19 ஜூன் 2026, 6:11 am IST

புதுச்சேரியில் குப்பை வாகனம் மோதி, தனியாா் உணவு நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

புதுச்சேரி சொக்கநாதன்பேட் பகுதியைச் சோ்ந்தவா் இதயகிரி (32). இவா், மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியாா் உணவு நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இதயகிரி புதன்கிழமை இரவு வழக்கம்போல வேலைக்கு சென்றுவிட்டு வியாழக்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் சக ஊழியா் ஒருவருடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

மேட்டுப்பாளையம் கனரக வாகன முனையம் வழியாக வந்தபோது சாலையில் இருந்த வேகத்தடையில் ஏறி இறங்கினாா். அப்போது பின்னால் வந்த குப்பை வாகனம் இதயகிரியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் அவா் பலத்த காயமடைந்தாா். உடனே, அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு இதயகிரியை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து புதுச்சேரி வடக்குப் பிரிவு போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.