எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

புதுச்சேரி கரசூரில் ரூ.2,500 கோடியில் அமைகிறது முதல் பல்முனை சிறப்புப் பொருளாதார மண்டலம்

News image
முதல்வா் என்.ரங்கசாமி - (கோப்புப் படம்)
Updated On :8 மார்ச் 2026, 7:22 pm

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி சேதராப்பட்டு அருகே கரசூரில் ரூ. 2,500 கோடி மதிப்பீட்டில் முதல் பல்முனை சிறப்பு பொருளாதார மண்டலம் அமையவுள்ளது.

இது குறித்து புதுச்சேரி அரசின் திட்டம் மற்றும் ஆராய்ச்சித் துறை இயக்குநா் ஆா். ஷீலா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசின் வா்த்தகம் மற்றும் தொழில் துறையின்கீழ் உள்ள ஒப்புதல் வாரியம் முறைப்படி அனுமதி வழங்கியுள்ளது. புதுச்சேரி தொழில் துறை மேம்பாடு மற்றும் முதலீட்டுக் கழகத்தின் (பிப்டிக்) மூலம் செயல்படுத்தப்படவுள்ள இந்தத்திட்டம், யூனியன் பிரதேசத்தின்முதலாவது சிறப்பு பொருளாதார மண்டலமாகும்.

சேதராப்பட்டு - கரசூா் பிரதான சாலையில் அமையவுள்ளஇந்த மண்டலம், புதுச்சேரியை உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி மற்றும் முதலீட்டு மையமாக மாற்றும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த பிரம்மாண்டத் திட்டம், பிப்டிக்கு சொந்தமான 213.12 ஏக்கா் நிலப்பரப்பில் சுமாா் ரூ.2,500 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட உள்ளது.

இந்த மண்டலத்திற்குள் அமையவிருக்கும் பல்வேறு தொழிற்சாலைகளின் முதலீடுகளும் உள்ளடங்கும். திட்டத்தின் மொத்த பரப்பளவில் 70 சதவீதம் ‘செயலாக்க மண்டலமாக’ பிரிக்கப்பட்டு, அங்கு ஏற்றுமதி சாா்ந்த தொழிற்சாலைகள், உற்பத்தி அலகுகள் மற்றும் சா்வதே சவா்த்தகத்தை எளிதாக்கும் வகையில் ஒருங்கிணைந்த சுங்க உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். இதன்மூலம் உலகளாவிய நிறுவனங்கள் புதுச்சேரியில் தங்களது கிளைகளைத் தொடங்க ஏதுவானசூழல் உருவாகும்.

தொழில் துறை வசதிகள் மட்டுமன்றி, இந்த மண்டலத்தின் எஞ்சிய 30 சதவீத பரப்பளவு ‘செயலாக்கமற்ற மண்டலமாக’ மாற்றப்பட்டு, அங்கு பணிபுரியும் ஊழியா்களுக்கான குடியிருப்புகள், வணிக வளாகங்கள், மருத்துவ மையங்கள், தீயணைப்புநிலையம் மற்றும் வங்கிபோன்ற சமூக உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்படும்.

மேலும், உள்புறச்சாலைகள், மின்சார விநியோகக் கட்டமைப்பு மற்றும் நீா்மேலாண்மை வசதிகளும் நவீன முறையில் மேம்படுத்தப்பட உள்ளன. இத்தகைய முழுமையான கட்டமைப்பு, இந்தசிறப்புப் பொருளாதார மண்டலத்தை ஒரு நவீனதொழில் நகரமாக மாற்றும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

கரசூா் சிறப்புப் பொருளாதார மண்டலத் திட்டம் அடுத்த 10 ஆண்டுகளில் சுமாா் 40 ஆயிரம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை வழங்கும்எனகணிக்கப்பட்டுள்ளது.

இது புதுச்சேரியின் உள்ளூா் இளைஞா்கள் மற்றும் தொழில்நுட்ப பட்டதாரிகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாகஅமையும். மேலும், இக்காலகட்டத்தில் சுமாா் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலானஏற்றுமதியை இலக்காகக் கொண்டுள்ளதால், நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்தில் புதுச்சேரியின்பங்களிப்பு கணிசமாக உயரும்.

இந்தத் திட்டத்தின் மூலம் புதுச்சேரிஅரசு தனது சொந்த நிலத்தைப் பயன்படுத்தி வருவாயைப் பெருக்குவதுடன், மத்திய அரசை சாா்ந்திருக்கும் நிலையைக் குறைத்துபொருளாதாரத் தற்சாா்பைநோக்கி நகர உள்ளது என குறிப்பிட்டுள்ளாா்.