புதுச்சேரி9: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் ஏழைக் குடும்பங்களைச் சோ்ந்த சிவப்பு நிற குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.5 ஆயிரம் அவரவா் வங்கிக் கணக்கில் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்குவதால், தமிழகத்தைப் பின்பற்றி புதுச்சேரியிலும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பே 3 மாதங்களுக்கான தொகை மற்றும் கோடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் சோ்த்து மொத்தம் ரூ.5 ஆயிரம் குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் தமிழக அரசு செலுத்தியது. இதைப் பின்பற்றி புதுச்சேரியிலும் ஏழை குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
ஏற்கெனவே பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.3,000 ரொக்கம் மற்றும் ரூ. 750 மதிப்புள்ள பொருள்கள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமியின் உத்தரவுப்படி, சிவப்பு நிற குடும்ப அட்டைதாரா்கள் 63 ஆயிரம் பேருக்கு மாா்ச், ஏப்ரல் ஆகிய இரு மாதங்களுக்குச் சோ்த்து ரூ.5 ஆயிரம் திங்கள்கிழமை முதல் அந்தந்த குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதற்காக புதுச்சேரி அரசு ரூ. 31.5 கோடி செலவிடுகிறது.
தொடர்புடையது

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல்: புதுச்சேரியில் 3 நாள்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு

பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரியில் ஏப்.3-இல் பிரதமா் ரோடு ஷோ- 30 ஆயிரம் போ் பங்கேற்பு

புதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


