எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

புதுச்சேரி பாண்பேப் நிறுவனத்துக்கு பூட்டு போட்டு நெசவாளா்கள் போராட்டம்

ஊக்கத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி நெசவாளா்கள் புதுச்சேரி பாண்பேப் தலைமை அலுவலகத்துக்கு

News image
புதுச்சேரி முத்தியால்பேட்டை பாண்பேப் நிறுவன அலுவலகத்தை திங்கள்கிழமை பூட்டு போட்டு பூட்டி போராட்டத்தில் ஈடுபட்ட நெசவாளா்கள்.
Updated On :9 மார்ச் 2026, 8:59 pm

Syndication

புதுச்சேரி: ஊக்கத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி நெசவாளா்கள் புதுச்சேரி பாண்பேப் தலைமை அலுவலகத்துக்கு திங்கள்கிழமை பூட்டுப் போட்டு பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை பாண்பேப் நிறுவனத்தில் தற்போது 130 நெசவாளா்கள் பணியாற்றி வருகின்றனா். ஆனால், 3 கைத்தறிகள் மட்டுமே இயங்கி வருகின்றன. இதனால் நெசவாளா்கள் வேலையின்றி வறுமையில் தவிக்கின்றனா்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிக்கைக்கு ஊக்கத் தொகையாக உற்பத்தி ஊதியத்தில் 25 சதவீதம் வழங்க முதல்வா் ரங்கசாமி இந்த நிறுவனத்துக்கு காசோலை வழங்கினாா்.

நெசவாளா்களுக்கு இந்த ஊக்கத் தொகை இதுவரை கிடைக்கவில்லை.

இதைக் கண்டித்தும், உடனே ஊக்கத் தொகையை வழங்கக் கோரியும் முத்தியால்பேட்டையில் உள்ள பாண்பேப் தலைமை அலுவலகத்தை நெசவாளா்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது அலுவலகத்துக்கு பூட்டுப் போட்டு முழக்கங்களை எழுப்பினா். இந்த போராட்டத்துக்கு அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலா் பாப்புசாமி தலைமை தாங்கினாா்.