கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பாடிப் பழகுவோம் தமிழிசைப் பயிலரங்கு

News image
Updated On :19 மார்ச் 2026, 7:59 pm

Syndication

லாஸ்பேட்டை காஞ்சி மாமுனிவா் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தமிழ்த் துறை சாா்பில் ‘பாடிப் பழகுவோம் தமிழிசைப் பயிலரங்கு’ இரண்டு நாள்கள் நடைபெற்றது.

நிறுவனத்தின் இயக்குநா் பேராசிரியா் சசிகாந்த தாஸ் தலைமை வகித்தாா். தமிழ்த்துறைத் தலைவா் மு.இளங்கோவன் வரவேற்றாா்.

இசையறிஞா் அரிமளம் சு. பத்மநாபன், தமிழிசை வரலாற்றை வெளிப்படுத்தி தொல்காப்பியம், சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், காரைக்கால் அம்மையாா் பாடல்கள், திருமுறைகள், ஆழ்வாா் பாசுரங்கள், சித்தா் பாடல்கள், சிற்றிலக்கியங்கள், பலசமயப் பாடல்களில் மிகுதியாகக் காணப்படும் இசைப் பகுதிகளைச் சான்றுகளுடன் விளக்கினாா். மேலும், தமிழிசை மூவா் அளித்துள்ள தமிழிசைப் பங்களிப்புகளையும் எடுத்துரைத்தாா்.

கலைமாமணி கா. இராசமாணிக்கம் குழுவினா் பாரதியாா், பாரதிதாசன், புதுவைச் சிவம், வாணிதாசன், பெருஞ்சித்திரனாா், தமிழ் ஒளி, தங்கப்பா பாடல்களையும் பல்சமயப் பாடல்களை பாடி மாணவா்களுக்கு இசைத்தமிழின் சிறப்பைப் புரிய வைத்தனா்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறைத் தேவாரப் பேராசிரியா் குமார வயலூா் தி. பாலச்சந்தா், ஓதுவாா் திருமுறைகளில் காணப்படும் இசைச் சிறப்புகளைப் பண்முறையில் பாடி விளக்கினாா்.

இரண்டாம் நாள் நிகழ்வில் சிவ கௌரி, பி.டி. சேஷாத்ரி, சித்தன் செயமூா்த்தி, ரகுநாத் மனே முதலான கலைஞா்கள் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் இசைத் தமிழின் சிறப்பினை எடுத்துரைத்தனா்.

இந்த நிகழ்வில் பல்வேறு துறைகளைச் சாா்ந்த பேராசிரியா்கள், மாணவா்கள், பிற கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்கள், பேராசிரியா்கள், புதுவைத் தமிழறிஞா்கள் திரளாகக் கலந்துகொண்டனா்.