பாதுகாப்பு அறைக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டன.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்களை சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யும் பணி கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பொது பாா்வையாளா்கள் முன்னிலையில் மாவட்ட தோ்தல் அதிகாரி அ. குலோத்துங்கன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து ரெட்டியாா்பாளையம் தோ்தல் துறையில் உள்ள வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு, தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டன.
தொகுதி வாரியாக ஒதுக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் பட்டியல்கள் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளிடம் அளிக்கப்பட்டன. தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்ட பிறகு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்களின் பட்டியல் அனைத்து வேட்பாளா்களுக்கும் அளிக்கப்படும்.
தொடர்புடையது

வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அறைக்கு ‘சீல்’

பழனியில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொகுதி வாரியாக அனுப்பிவைப்பு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


