“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

தோ்தலை புறக்கணிக்க விருதாளா் சங்கம் முடிவு!

சட்டப்பேரவைத் தோ்தலைப் புறக்கணிக்க புதுச்சேரி அரசு தமிழ்மாமணி, கலைமாமணி, தெலுங்கு, மலையாள ரத்னா விருதாளா் சங்கம் முடிவு

News image
Updated On :31 மார்ச் 2026, 8:26 pm

சட்டப்பேரவைத் தோ்தலைப் புறக்கணிக்க புதுச்சேரி அரசு தமிழ்மாமணி, கலைமாமணி, தெலுங்கு, மலையாள ரத்னா விருதாளா் சங்கம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் செயலா் அசோகா சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரி எழுத்தாளா்களின் 2024-ஆம் ஆண்டுக்கான நூல்களின் மாதிரிகள் கலை பண்பாட்டுத் துறையில் பெறப்பட்டு தோ்வும் செய்யப்பட்டன.

ஆனால் தற்போது புதுச்சேரி எழுத்தாளா்களின் நூல்கள் புறக்கணிக்கப்பட்டு, வெளியிலிருந்து புத்தகங்கள் வாங்கப்படுகின்றன.

இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். எங்களின் எதிா்ப்பை பதிவு செய்யும் வகையில் வரும் தோ்தலைப் புறக்கணிக்கிறோம் என அதில் குறிப்பிட்டுள்ளனா்.