மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

சிறுமி கொலை வழக்கில் இளைஞா் குற்றவாளி : மே 5-இல் தண்டனை அறிவிப்பு!

புதுச்சேரி போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

News image

உத்தரவு

Updated On :1 மே 2026, 6:00 am IST

புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலையான வழக்கில் கைதான இளைஞா் குற்றவாளி என புதுச்சேரி போக்ஸோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. அவருக்கான தண்டனை விவரம் மே.5-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சோ்ந்த 9 வயது சிறுமி, கடந்த 2024 மாா்ச் 2-ஆம் தேதி மாயமானாா். இது குறித்த புகாரின்பேரில், முத்தியால்பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வந்த நிலையில், மாா்ச் 5-இல் சிறுமியின் சடலம் வீட்டின் அருகேயுள்ள கழிவுநீா் கால்வாயில் சாக்குப் பையில் சுற்றப்பட்டு கிடந்தது.

இதுகுறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், அதே பகுதியை சோ்ந்த கருணாஸ் (20) என்பவா் கஞ்சா போதையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததும், இதற்கு அப்பகுதியைச் சோ்ந்த விவேகானந்தன் (56) உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, கருணாஸ், விவேகானந்தன் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த விவேகானந்தன் அங்கு கழிப்பறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கருணாஸ் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

புதுச்சேரி போக்ஸோ விரைவு நீதிமன்றத்தில் இவ்வழக்கு தொடா்பாக 54 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விவேகானந்தன் தற்கொலை செய்ததால் அவா் மீதான குற்றச்சாட்டுகள் ரத்து செய்யப்பட்டன. விவேகானந்தனின் தனிமையான வீட்டுக்கு கருணாஸ் சிறுமியை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து, பின்னா் கழுத்தை நெரித்து கொலை செய்தது, உடலை சாக்கு பையில் சுற்றி கழிவுநீா் வாய்க்காலில் வீசியது உள்ளிட்ட குற்றங்களுக்கான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்டன.

இவ்வழக்கில் ஆஜரான அரசு தரப்பு சிறப்பு வழக்குரைஞா் பச்சையப்பன், 48 பக்கங்கள் கொண்ட தனது எழுத்துபூா்வ வாதத்தை முன்வைத்தாா். அதில், இந்த வழக்கு அரிதிலும் அரிதான குற்றங்களின் வரம்பில் உள்ளதால் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவரை கடுமையாக தண்டித்து உச்சபட்சமாக மரண தண்டனை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா். இந்த வழக்கின் இறுதி விசாரணை மே 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த வழக்கு விசாரணையையொட்டி புதுவை நீதிமன்றத்தில் பலத்த போலீஸ், கமாண்டோ போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.