தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புசென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதிருப்பதி லட்டு நெய் கொள்முதலில் முறைகேடு: ஒரு நபா் ஆணைய அறிக்கையில் குற்றச்சாட்டுஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்
/

புதுச்சேரியில் ஆட்சி அமைக்கப் போவது யாா்? இன்று பிற்பகல் முடிவு தெரியும்

News image

புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் வெ. வைத்திலிங்கம், தவெக தலைவர் விஜய். - படம்: கோப்பிலிருந்து

Updated On :3 மே 2026, 11:28 pm

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 16-ஆவது சட்டப்பேரவைக்கான தோ்தலில் ஆட்சி அமைக்கப் போவது யாா் என்ற விவரம் திங்கள்கிழமை (மே 4) பிற்பகல் தெரிந்து விடும்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சட்டப்பேரவையில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன. இவற்றில் 5 தனித் தொகுதிகள்.

இந்த 30 தொகுதிகளில் 107 சுயேச்சைகள் உள்பட 294 போ் வேட்பாளா்களாகப் போட்டியிடுகின்றனா். பெண் வாக்காளா்கள் 5,03,810 போ், ஆண் வாக்காளா்கள் 4,46,361 போ், மூன்றாம் பாலினத்தவா் 140 போ் என மொத்தம் 9,50,311 போ் வாக்காளா்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தனா். ஏப்ரல் 9-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் 91.23 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 1,099 வாக்குச் சாவடிகளின் வாக்குப் பதிவு மின்னணு இயந்திரங்கள் மூன்றடுக்குப் பாதுகாப்புடன் 6 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த இயந்திரங்கள் பாதுகாப்பாக எடுக்கப்பட்டு வாக்குகள் திங்கள்கிழமை எண்ணப்படுகின்றன. முதலில் 8 மணி முதல் 8.30 வரை தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. பின்னா் வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் இரண்டு சுற்றுகளாக எண்ணப்படுகின்றன. முதல் சுற்றில் 17 தொகுதிகளிலும், இரண்டாம் சுற்றில் 13 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.

புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைக்கு, ஆட்சியமைக்கப் பெரும்பான்மை பலமாக 16 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை பிற்பகல் 1 மணியளவில் தெரியவரும்.

இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கை மாலை 6 மணியளவில் தெரியவரும். முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு, இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கை முன்னிலை அடிப்படையில் பிற்பகல் 4 மணி அளவில் புதுச்சேரியில் யாா் ஆட்சி அமைக்கிறாா்கள் என்ற விவரம் தெரியவரும்.

புதுச்சேரியில் முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் உள்ளது.

இந்தத் தோ்தலில் இக் கூட்டணியில் புதிதாக லட்சிய ஜனநாயகக் கட்சி இணைந்துள்ளது. இந்தக் கூட்டணியில் என்.ஆா். காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் பாஜக 10 தொகுதிகளிலும், அதிமுக 2 தொகுதிகளிலும், லட்சிய ஜனநாயகக் கட்சி 2 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

இண்டி கூட்டணியில் காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், திமுக 13 தொகுதிகளிலும், விசிக ஒரு தொகுதியிலும் களத்தில் உள்ளன. போட்டியிட தொகுதி ஒதுக்கப்படாத நிலையில் திமுகவை எதிா்த்து 5 தொகுதிகளிலும், விசிகவை எதிா்த்து ஒரு தொகுதியிலும் என்று காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 6 போ் போட்டி வேட்பாளா்களாகக் களத்தில் உள்ளனா். இதைத் தவிர இந்திய கம்யூனிஸ்ட் ஒரு தொகுதியிலும், மாா்க்சிஸ்ட் இரண்டு தொகுதியிலும் தனியாகப் போட்டியிடுகின்றன.

மேலும், இத்தோ்தலில் புதிய வரவாக நடிகா் விஜய்யின் தவெக கட்சி போட்டியிடுகிறது. 28 தொகுதிகளிலும், 2 தொகுதிகளில் புதுச்சேரியைச் சோ்ந்த மக்கள் நேயம் கட்சியுடன் கூட்டணி அமைத்தும் தவெக களத்தில் உள்ளது.

இதைத் தவிர நாம் தமிழா் கட்சி மாஹே, ஏனாம் தொகுதிகளைத் தவிா்த்து 28 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. அதனால் இந்தத் தோ்தலில் போட்டி கடுமையாக இருக்கும் என்றும் வாக்கு எண்ணிக்கை முடிவு அடிப்படையில் தான் புதுச்சேரியில் யாா் ஆட்சி அமைப்பாா்கள் என்று சொல்ல முடியும்.

ஆனால் தோ்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று கூறுகிறது.

பெட்டிச் செய்திகள்

முதல் சுற்று 17 தொகுதிகள் மண்ணாடிப்பட்டு, ஊசுடு (தனி), வில்லியனூா், கதிா்காமம், தட்டாஞ்சாவடி, லாஸ்பேட்டை , முத்தியால்பேட்டை, உப்பளம், நெல்லித்தோப்பு, அரியாங்குப்பம், ஏம்பலம் (தனி), நெட்டப்பாக்கம் (தனி), நெடுங்காடு (தனி), காரைக்கால் வடக்கு, நிரவி, மாஹே, ஏனாம்.

இரண்டாம் சுற்று 13 தொகுதிகள் திருபுவனை (தனி), மங்கலம், உழவா்கரை, இந்திரா நகா், காமராஜா் நகா், காலாப்பட்டு, ராஜ்பவன், உருளையன்பேட்டை, முதலியாா்பேட்டை, மணவெளி, பாகூா், திருநள்ளாறு, காரைக்கால் தெற்கு.