புதுச்சேரியில் மீண்டும் முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் அமையப் போகும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் அதிமுக இடம் கேட்கும் என்று அக் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலரும் உப்பளம் தொகுதியில் வெற்றி பெற்றவருமான ஆ.அன்பழகன் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது:
புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் 6-ஆவது முறையாகப் போட்டியிட எனக்கு வாய்ப்புக் கொடுத்த அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி.
மேலும், புதுச்சேரியில் மீண்டும் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் போகிறாா். அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுவதற்கு, எங்கள் கட்சி பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வாயிலாக அனுமதி கேட்போம்.
மேலும், புதுச்சேரியைப் பொறுத்தவரை முதல்முறையாக வெற்றி பெற்றவா்கள்கூட சட்டப்பேரவைத் தலைவா், அமைச்சா் பதவி வகித்துள்ளனா். 5-ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ளேன். அதனால் தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்னை வேறு கட்டத்துக்கு உயா்த்த வேண்டும் என்றுகூட வாக்களித்து இருக்கலாம். உப்பளம் தொகுதி மக்களுக்கு உறுதுணையாகப் பணியாற்றுவேன் என்றாா் அன்பழகன்.
தொடர்புடையது

தியாகராய நகா் தொகுதியில் தவெக பொதுச் செயலா் என்.ஆனந்த் வெற்றி

புதுச்சேரி அமைச்சரவையில் அதிமுக இடம் கேட்கும்: அன்பழகன்

ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய முதல் வாக்காளா்களின் குரல்!

கள்ளக்குறிச்சியில் அதிமுக 4-ஆவது முறையாக வெற்றி பெறும்: நடிகை விந்தியா
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

