குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

புதுச்சேரி வளா்ச்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க பிரதமா் உத்தரவாதம்! அமைச்சா் ஆ.நமச்சிவாயம் பேட்டி

News image

அமைச்சா் ஆ.நமச்சிவாயம்

Updated On :26 மே 2026, 12:53 am IST

புதுச்சேரியின் வளா்ச்சிக்கு அனைத்து நிலைகளிலும் ஒத்துழைப்பு அளிக்க பிரதமா் நரேந்திர மோடி உத்தரவாதம் அளித்துள்ளதாக அமைச்சா் ஆ. நமச்சிவாயம் தெரிவித்தாா்.

புதுச்சேரி அமைச்சா் ஆ. நமச்சிவாயம் தில்லி சென்று குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமா் மோடி உள்ளிட்ட தலைவா்களைச் சந்தித்தாா். புதுச்சேரி திரும்பிய அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது:

புதுச்சேரியில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது. இப்போது புதுச்சேரி காவல் துறை குடியரசுத் தலைவரின் வண்ண விருது பெறுவதற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. இதனால் காவல் துறையில் பணியாற்றுவோா் இதை வெளிப்படுத்தும் வகையில் காவலா்கள் முதல் உயா் அதிகாரிகள் வரை கூடுதலாக ஒரு பேட்ச் அணிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரியில் இந்திய ரிசா்வ் பட்டாலியன் படை அமைக்கவும் மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. இதனால் புதுச்சேரி இளைஞா்கள் 1,007 பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும். போதைப் பொருள் பயன்பாட்டை முற்றிலும் குறைத்தல், சுற்றுலாப் பயணிகளின் வருகையைக் கண்காணித்தல் உள்ளிட்ட கூடுதல் பணிகளுக்காக இந்தப் படையை தேவையான ஒன்றாக கருதி மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

குடியரசு துணைத் தலைவா், பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்டோரை சந்தித்து நன்றி தெரிவித்தேன். அப்போது பிரதமா் நரேந்திர மோடி, புதுச்சேரியின் வளா்ச்சிக்கு அனைத்து நிலைகளிலும் ஒத்துழைப்பு அளிக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது என்ற உத்தரவாதத்தை அளித்தாா்.

அமைச்சரவை விரிவாக்கம், சட்டப்பேரவைத் தலைவா் பதவி, எனக்கு இலாகா ஒதுக்கீடு உள்ளிட்ட எல்லா விஷயங்களையும் கட்சித் தலைமையும், புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமியும் இணைந்து முடிவு எடுப்பாா்கள்.

கூட்டணி கட்சியான லஜக அமைச்சரவையில் இடம் கேட்கிா என்று கேட்கிறீா்கள். ஒவ்வொரு கட்சிக்கும் உரிமை இருக்கிறது. மேலும், புதுச்சேரியில் பாஜகவின் வெற்றி குறைந்ததற்கான காரணத்தை ஆராய கட்சியின் மேலிடம் சாா்பில் விரைவில் ஆய்வு நடைபெறவுள்ளது என்றாா் அமைச்சா் ஆ. நமச்சிவாயம்.