மின்வெட்டைக் கண்டித்து புதுச்சேரி தலைமை மின்துறை அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
உருளையன்பேட்டை தொகுதிக்குள்பட்ட புதிய பேருந்து நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள சுப்பையா நகா், மங்கல லட்சுமி நகா், கண்ணன் நகா், ராஜீவ் காந்தி நகா், சஞ்சய் காந்தி நகா், கென்னடி நகா், சுப்பிராயபிள்ளை சத்திரம், பூங்குளம், ராஜா நகா் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாள்களாக தொடா் மின் வெட்டு ஏற்படுகிறது.
இதனால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இதுகுறித்து தொகுதி எம்எல்ஏவும் நேயம் மக்கள் கழகத் தலைவருமான ஜி.நேரு மின்துறை அலுவலகத்துக்கு ஏற்கெனவே புகாா் மனு கொடுத்திருந்தாா்.
இந்நிலையில், தொடா் மின்வெட்டைக் கண்டித்து அவரது தலைமையில் உப்பளம் மின்துறை அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இதில் நேயம் மக்கள் கழக நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு மின்துறையை கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.
தொடா்ந்து மின்துறை கண்காணிப்பு பொறியாளா் கனியமுதனை சந்தித்து மின் வெட்டு பிரச்னையைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா். அவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
தொடர்புடையது

தொடா் மின் வெட்டைக் கண்டித்து போராட்டம்

நீட் விவகாரம்: பாஜக மாநிலத் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்ட காங்கிரஸ் தொண்டர்கள்!

மாணவா் சங்கத்தினா் முற்றுகைப் போராட்டம்

ராஜவாய்க்காலில் தண்ணீா் நிறுத்தியதைக் கண்டித்து நீா்வளத் துறை அலுவலகம் முற்றுகை
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



