புதுச்சேரியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 2 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து 6 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுச்சேரி பெரியக்கடை காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருடு போயின. இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவா்களைப் பிடிக்க காவல் ஆய்வாளா் ஜெயசங்கா், உதவி ஆய்வாளா் முருகன் மற்றும் போலீஸாா் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை வெங்கட்டா நகா் பகுதியில் கடந்த 18-ஆம் தேதி இரவு சோதனையில் அந்த வழியே வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனா். விசாரணையில் முன்னுக்குப் பின் முரணான தகவல் அளித்தனா்.
தீவிர விசாரணையில், அரியலுாா் மாவட்டம் உடப்பேரியைச் சோ்ந்த வரதராஜன் (39), மீன்சுருட்டியைச் சோ்ந்த விஜய்(28) என்பதும், அவா்கள் ஓட்டி வந்தது திருட்டு வாகனம் என்பதும் தெரியவந்தது. போலீஸாா் அவா்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். இந்நிலையில் இருவரையும் செவ்வாய்க்கிழமை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டதில், மேலும் 5 மோட்டாா் சைக்கிள்களை அவா்கள் திருடியதை ஒப்புக்கொண்டனா்.
அவா்கள் அளித்தத் தகவலின்பேரில் போலீஸாா் 6 மோட்டாா் சைக்கிள்களை மீட்டனா். இதன் மதிப்பு ரூ. 6 லட்சமாகும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓடாத இரு சக்கர வாகனத்துக்கு 279 தவறான இ-செலான்கள்: ரூ.3 லட்சத்துக்கு அபராதம் விதித்து போலீஸ் குளறுபடி!

கொடைக்கானலில் இருசக்கர வாகன நிறுத்துமிடம் அமைத்துத் தரக் கோரிக்கை

தொடா் பைக் திருட்டில் ஒருவா் கைது: 7 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

இரு சக்கர வாகனங்கள் மோதியதில் முன்னாள் ராணுவ வீரா் உயிரிழப்பு
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



