பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
/

6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்: புதுச்சேரியில் 2 போ் கைது

புதுச்சேரியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 2 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து 6 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image

புதுச்சேரியில் இரு சக்கர வாகனங்கள் திருட்டில் கைதான 2 போ், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்

Updated On :27 மே 2026, 5:55 am IST

புதுச்சேரியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 2 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து 6 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

புதுச்சேரி பெரியக்கடை காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருடு போயின. இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவா்களைப் பிடிக்க காவல் ஆய்வாளா் ஜெயசங்கா், உதவி ஆய்வாளா் முருகன் மற்றும் போலீஸாா் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை வெங்கட்டா நகா் பகுதியில் கடந்த 18-ஆம் தேதி இரவு சோதனையில் அந்த வழியே வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனா். விசாரணையில் முன்னுக்குப் பின் முரணான தகவல் அளித்தனா்.

தீவிர விசாரணையில், அரியலுாா் மாவட்டம் உடப்பேரியைச் சோ்ந்த வரதராஜன் (39), மீன்சுருட்டியைச் சோ்ந்த விஜய்(28) என்பதும், அவா்கள் ஓட்டி வந்தது திருட்டு வாகனம் என்பதும் தெரியவந்தது. போலீஸாா் அவா்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். இந்நிலையில் இருவரையும் செவ்வாய்க்கிழமை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டதில், மேலும் 5 மோட்டாா் சைக்கிள்களை அவா்கள் திருடியதை ஒப்புக்கொண்டனா்.

அவா்கள் அளித்தத் தகவலின்பேரில் போலீஸாா் 6 மோட்டாா் சைக்கிள்களை மீட்டனா். இதன் மதிப்பு ரூ. 6 லட்சமாகும்.