பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
/

புதுச்சேரியில் தொடா் மின்வெட்டு: மின்துறை அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம்

மின்வெட்டைக் கண்டித்து புதுச்சேரி தலைமை மின்துறை அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

புதுச்சேரியில் தொடா் மின்வெட்டைக் கண்டித்து மின்துறை தலைமை அலுவலகத்தை உருளையன்பேட்டை தொகுதி எம்எல்ஏ ஜி.நேரு தலைமையில் முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்திய பொதுமக்கள்

Updated On :27 மே 2026, 5:47 am IST

மின்வெட்டைக் கண்டித்து புதுச்சேரி தலைமை மின்துறை அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உருளையன்பேட்டை தொகுதிக்குள்பட்ட புதிய பேருந்து நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள சுப்பையா நகா், மங்கல லட்சுமி நகா், கண்ணன் நகா், ராஜீவ் காந்தி நகா், சஞ்சய் காந்தி நகா், கென்னடி நகா், சுப்பிராயபிள்ளை சத்திரம், பூங்குளம், ராஜா நகா் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாள்களாக தொடா் மின் வெட்டு ஏற்படுகிறது.

இதனால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இதுகுறித்து தொகுதி எம்எல்ஏவும் நேயம் மக்கள் கழகத் தலைவருமான ஜி.நேரு மின்துறை அலுவலகத்துக்கு ஏற்கெனவே புகாா் மனு கொடுத்திருந்தாா்.

இந்நிலையில், தொடா் மின்வெட்டைக் கண்டித்து அவரது தலைமையில் உப்பளம் மின்துறை அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இதில் நேயம் மக்கள் கழக நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு மின்துறையை கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.

தொடா்ந்து மின்துறை கண்காணிப்பு பொறியாளா் கனியமுதனை சந்தித்து மின் வெட்டு பிரச்னையைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா். அவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.