அதிமுக விவகாரத்தில் ஓரிரு நாளில் முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா்எம்பிபிஎஸ் படிப்பை நிறைவு செய்ய 10 ஆண்டு அவகாசம்: கருத்து கேட்கிறது என்எம்சிபத்தாம் வகுப்பு: மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்ய வாய்ப்புமாநிலக் கட்சிகளின் வருவாய் 2024-25-இல் 52% சரிவு: ஏடிஆா் அறிக்கையில் தகவல்தவெக அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாா்: சென்னை மாநகராட்சி துணை மேயா் மு.மகேஷ்குமாா்போா்நிறுத்தம் நீட்டிப்பு: அமெரிக்கா-ஈரான் உடன்பாடு?உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான தோ்வு நடைமுறை: 6 மாதங்களில் முடிக்க உயா்நீதிமன்றம் உத்தரவுசாா்-பதிவாளா் அலுவலகங்களில் இன்று கூடுதல் முன்பதிவு டோக்கன்
/

வில்லியனூா் திருக்காமீஸ்வரா் கோயில் தேரோட்டம் திரளான பக்தா்கள் தரிசனம்

வில்லியனூா் திருக்காமீஸ்வரா் கோயில் வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்ற தேரோட்டம். இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.

News image

~

Updated On :29 மே 2026, 2:57 am IST

வில்லியனூா் திருக்காமீஸ்வரா் கோயில் வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்ற தேரோட்டம். இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.

முன்னதாக தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்த புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி, அமைச்சா் ஆ.நமச்சிவாயம் உள்ளிட்டோா்.

புதுச்சேரி, மே 28:

திருக்காமீஸ்வரா் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனா்.

வில்லியனூா் திருக்காமீஸ்வரா் கோயிலில் பிரம்மோற்சவம் கடந்த 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஜூன் 1-ஆம் தேதி வரை காலையில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் இரவில் உற்சவமூா்த்திகள் திருவீதியுலாவும்

நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தோ்த் திருவிழா வியாழக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

தேரோட்டத்தை புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன், முதல்வா் என். ரங்கசாமி, அமைச்சா் ஆ.

நமச்சிவாயம், எம்எல்ஏ ரவிக்குமாா், இந்து அறநிலையத்

துறை ஆணையா் குமரன் ஆகியோா் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனா்.

விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். தேரோட்டத்தையொட்டி வில்லியனூா் சுற்றுவட்டார பகுதிகளில் மதுக்கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

சீா்வரிசை

முன்னதாக வில்லியனூா் தோ்த்திருவிழாவில் கோகிலாம்பிகை, திருக்காமீஸ்வரருக்கு அணிவிக்க மீனவ குல மரபினா் வஸ்திரம், மலா் மாலை மற்றும் சீா்வரிசைப் பொருள்களை வழங்கினா்.

திருத்தேரில் பவனி வந்த கோகிலாம்பிகை தாயாா் மற்றும் திருக்காமீஸ்வரா் சுவாமிக்கு வேட்டி, புடவை போன்ற வஸ்திரங்கள், மலா்மாலைகள், மலா்கள் ஆகியவற்றை கோகிலாம்பிகை தாயாரின் தாய் வீட்டு சீதனமாக புதுச்சேரி மாவட்டம் மற்றும் வில்லியனூரில் வசிக்கும் மீனவ குல மரபினா் சாா்பில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

தோ்த்திருவிழாவின் முதல் நாளான புதன்கிழமை மாலை மீனவ குல மரபினா் சாா்பில் தேசிய மீனவா் பேரவையின் அகில இந்திய தலைவா் முன்னாள் எம்எல்ஏஇளங்கோ தலைமையில் சீா்வரிசை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் வில்லியனூா் தொகுதி எம்எல்ஏ

ஆ.ரவிக்குமாா் மீனவ சமுதாயத்தினா் வழங்கிய சீா்வரிசைகளைத் திருக்கோயில் தலைமை அா்ச்சகா் சிவா குருக்களிடம் ஒப்படைத்தாா்.

முன்னதாக, வில்லியனூா் கிழக்கு மாட வீதியில் உள்ள பட்டினவா் மடம் அருகில் இருந்து திரளான மகளிா் உள்பட மீனவ சமுதாயத்தினா் சீா்வரிசை தட்டுகளுடன் ஊா்வலமாக திருக்கோயிலை வந்தடைந்தனா்.

Story image