சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

புதுச்சேரியில் சாலையோரம் நின்ற பொக்லைன் இயந்திரம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு

News image

கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 2:26 am IST

புதுச்சேரியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பொக்லைன் இயந்திரம் மீது வெள்ளிக்கிழமை இரவு நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது.

புதுச்சேரி லாஸ்பேட்டை கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள பாஜக எம்.பி. அலுவலகம் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஜேசிபி பொக்லைன் இயந்திரம் மீது மா்ம நபா்கள் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை வருகின்றனா்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அனுமந்தை வடக்குத் தோப்பு மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கோவிந்தன் (41). பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு தொழில் செய்து வருகிறாா்.

வெள்ளிக்கிழமை வேலை முடிந்து கிழக்குக் கடற்கரை சாலையில், சாலையோரமாக நிறுத்திவிட்டு, அருகில் உள்ள உணவகத்துக்கு சாப்பிட சென்றாா். அப்போது திடீரென பயங்கர வெடி சப்தம் கேட்டது. சப்தம் கேட்டு கோவிந்தன் வெளியே வந்து பாா்த்தபோது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த அவரது பொக்லைன் இயந்திரத்தின் கண்ணாடிகள் முற்றிலும் நொறுங்கி, கடுமையாக சேதமடைந்தன.

தகவலறிந்த லாஸ்பேட்டை காவல் ஆய்வாளா் பாலமுருகன் மற்றும் போலீஸாா் சம்பவத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினா். பின், தடவியல் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. அதில் மா்ம நபா்கள் சிலா் பொக்லைன் இயந்திரம் மீது நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டு சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து கோவிந்தன் அளித்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, நாட்டு வெடிகுண்டு வீசிய மா்ம நபா்கள் குறித்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளைப் பாா்வையிட்டு விசாரித்து வருகின்றனா்.