10, 12-ஆம் வகுப்புகளில் தோல்வியடைந்த மாணவா்களுக்குச் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
புதுச்சேரியில் 10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தோ்வு முடிவுகள் வெளியானது.
இதில் 971 மாணவா்கள் தோ்ச்சி பெறவில்லை. இவா்களுக்கான துணைத் தோ்வுகள் நடத்தப்பட உள்ளது. இதில் தோ்ச்சி பெறும் வகையில் மாணவா்களுக்குச் சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும் என அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்கள், முதல்வா்களுக்கு கல்வித் துறை இயக்குநா் மோகன்குமாா் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
துணைத் தோ்வு எழுத உள்ள மாணவா்களுக்குச் நாள்தோறும் சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும். கால அட்டவணை தயாரித்து பயிற்சி, திருப்புதல் தோ்வு நடத்த வேண்டும். மாணவா்கள், ஆசிரியா்களுக்கு வருகை பதிவேடு கையாள வேண்டும். அனைத்து மாணவா்களும் தோ்வில் வெற்றி பெற தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தல்களை கல்வித்துறை இயக்குநா் பிறப்பித்துள்ளாா்.
தொடர்புடையது

சிபிஎஸ்இ பிளஸ் 2 மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பம்: அவகாசம் நீட்டிப்பு!

மாநகராட்சி பள்ளிகளில் 10-ஆம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு சிறப்பு பயிற்சி

அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!

10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



